சித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஸ்ரீ பத் நாயக்

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் திங்கள் கிழமை(ஜன.8)  தொடங்கும் தேசிய பாரம்பரிய சித்தமருத்துவர்கள் கருத்தரங்கில் மத்திய அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் பங்கேற்க உள்ளார்.


 கன்னியா குமரி விவேகானந்த கேந்திரத்தில் அமைந்துள்ள இயற்கைவள அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பல்வேறு கருத்தரங்குகள், நூல்கள் வெளியீடு, மருத்துவர்கள் கலந்தாய்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. 
இந்நிலையில் அவசரகால உடனடி நோய்களுக்கு வர்மவைத்திய பரிகார முறைகளும், விளக்கங்களும் என்ற தலைப்பில் பாரம்பரிய சித்தமருத்துவர்கள் பங்கேற்கும் தேசிய கருத்தரங்கம் நடைபெற உள்ளது.


  இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சித்த மருத்துவர்கள், ஆய்வாளர்கள், வைத்தியர்கள் பங்கேற்க உள்ளனர். வர்மம் தொடர்பான செயல் முறை விளக்கம், வர்மபரிகார முறைகள், ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. இதுதொடர்பான சிறப்பு அமர்வுகளில் சித்த வர்ம முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்த விவாதங்கள் நடைபெறும். இதில் மத்திய சித்த, ஆயுர்வேத யோகா மற்றும் ஓமியோபதித்துறை அமைச்சர் ஸ்ரீ பத் நாயக் பங்கேற்று பேசுகிறார். 


இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்த கேந்திர இயற்கைவள அபிவிருத்தி திட்டச் செயலர் வாசுதேவ், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் வே.கணபதி ஆகியோர் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...