சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்

‘எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘ஷிக்ஷக் பர்வ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இதை பிரதமர் நரேந்திரமோடி நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கிவைத்தார்.

செவித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ஒலி மற்றும் எழுத்து இணைந்த சைகைமொழி காணொலிகள் தயாரிக்கப்பட்டு, இந்திய சைகை மொழி அகராதி உருவாக்கப் பட்டுள்ளது.அதேபோல பார்வையற்றோருக்கு ஒலி வாயிலாக பேசும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கல்விசார் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சி.எஸ்.ஆர். நிதிஎனப்படும் ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ நிதி வழங்குவோருக்காக விதயாஞ்சலி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தவிழாவில் சைகைமொழி அகராதி, ஒலி மூலம் பேசும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின்தரம் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான ‘நிஷித்தா’ பயிற்சித்திட்டம், வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்.இதனால்தான் இந்தியாவில் கல்வியின் ஒருபகுதியாக சைகைமொழி அகராதி பேசும் புத்தகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
தேசிய விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்கள்முயற்சி பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள், கல்வித் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தரமதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு, போட்டித்தன்மையை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒவ்வொருவீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுடன் ஒருமணிநேரம் செலவிட்டு விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டுகிறேன். ஒலிவடிவிலான புத்தகங்கள், கல்வி முறையின் ஒருபகுதி. இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்திய சைகை மொழி, ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.செப். 17 வரை நடக்க உள்ள இந்த கருத்தரங்கில் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...