சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்

‘எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘ஷிக்ஷக் பர்வ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இதை பிரதமர் நரேந்திரமோடி நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கிவைத்தார்.

செவித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ஒலி மற்றும் எழுத்து இணைந்த சைகைமொழி காணொலிகள் தயாரிக்கப்பட்டு, இந்திய சைகை மொழி அகராதி உருவாக்கப் பட்டுள்ளது.அதேபோல பார்வையற்றோருக்கு ஒலி வாயிலாக பேசும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கல்விசார் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சி.எஸ்.ஆர். நிதிஎனப்படும் ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ நிதி வழங்குவோருக்காக விதயாஞ்சலி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தவிழாவில் சைகைமொழி அகராதி, ஒலி மூலம் பேசும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின்தரம் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான ‘நிஷித்தா’ பயிற்சித்திட்டம், வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்.இதனால்தான் இந்தியாவில் கல்வியின் ஒருபகுதியாக சைகைமொழி அகராதி பேசும் புத்தகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
தேசிய விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்கள்முயற்சி பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள், கல்வித் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தரமதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு, போட்டித்தன்மையை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒவ்வொருவீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுடன் ஒருமணிநேரம் செலவிட்டு விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டுகிறேன். ஒலிவடிவிலான புத்தகங்கள், கல்வி முறையின் ஒருபகுதி. இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்திய சைகை மொழி, ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.செப். 17 வரை நடக்க உள்ள இந்த கருத்தரங்கில் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...