அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது

கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவந்து, அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

திருச்சிவிமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு பெரும்முயற்சி எடுத்து வருகிறது. மண் பரிசோதனைக்காக நில வள அட்டை, பயிர்ப் பாதுகாப்புத் திட்டம் போன்ற பலதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் பங்கீட்டுத்தொகை செலுத்தப்பட்ட பிறகும் மாநில அரசு காப்பீட்டு தொகையை விவசாயிகளிடம் கொண்டுசேர்ப்பதில் தாமதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய பயிர்க் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. 

காவிரிப் பிரச்னையில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்புவர இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் என்ன செய்திருக்கிறீர்கள் எனக் கேள்விகேட்பவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தார்கள். தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பிரச்னையைத் தீர்த்து வைக்காதவர்கள் இன்று கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


காமராஜர் பலஅணைகளைக் கட்டினார். திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் எத்தனை அணைகள் கட்டப்பட்டன. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணைகட்டுகிறது. காவிரியின் குறுக்கே அணைகட்டுகிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கேள்விக் குறியோடு பார்க்கவேண்டும். அதனால் தான் மத்திய அரசு கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவந்து இங்குள்ள அனைத்து நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முயற்சி செய்துவருகிறது. 


தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முழுநோக்கம் கட்சியைப் பலப்படுத்துவதுதான். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் வளர்ச்சி புலப்படும். இரண்டு கழகங்களுக்கும் இடையில் தான் நாங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பலத்தை காண்பிப்பது இப்போது நோக்கமாக இருக்கிறது. நவீன நகரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்த வில்லை. இதை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...