ஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம்

மேகேதாட்டு அணையை கட்டியேதீருவோம் என்று அறிவித்துள்ள கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை கண்டித்து ஆகஸ்ட்5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கர்நாடகாவில் காவிரியின்குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட அம்மாநில அரசு முயற்சித்து வருகிறது. கர்நாடக பாஜக அரசின் புதியமுதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை, மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று கூறியுள்ளார். இதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம்தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கர்நாடக முதல்வரின் பேச்சை கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்றுகூறியதாவது:

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நதியால் பயன் பெறும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதி பெறாமல் கர்நாடகாவில் அணைகட்ட முடியாது. மேகேதாட்டுவில் அணை கட்ட ஒரு செங்கலைக் கூட எடுத்துவைக்க அனுமதிக்க மாட்டோம்.

அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.அம்மாநில முதல்வரின் பேச்சால் தமிழக விவசாயிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதைபோக்கி, நம்பிக்கை ஏற்படுத்த, தஞ்சாவூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தஉள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...