ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது.

அயோத்தியில் பிப்., 13ம் தேதி துவங்கிய விஸ்வ இந்துபரிஷத் அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரை, கேரளா, கர்நாடகா உட்பட ஐந்து மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது.

முஸ்லிம் அமைப்பு களுடன் இணைந்து தி.மு.க., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள், யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் ரதயாத்திரை செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராம ராஜ்ய ரதயாத்திரை உ.பி.,யில் பிப்., 13ம் தேதி துவங்கியது. உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் என ஆறு மாநிலங்களில் இந்தயாத்திரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. கடைசியாக ராமேஸ்வரத்தில் யாத்திரை முடியவேண்டும்.

இந்த யாத்திரைக்கு மற்ற ஐந்து மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை. குறிப்பாக, காங்., ஆட்சிநடக்கும் கர்நாடகா மற்றும் இடதுசாரி ஆட்சி நடக்கும் கேரளாவில் இந்த யாத்திரைக்கு, அந்த மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்க வில்லை. நேற்று(மார்ச் 19) இரவு, கேரளா புனலுாரில் யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை, நெல்லை மாவட்டம், கோட்டை வாசலுக்கு வந்த ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வழியாக, இன்று மதியம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சென்று, இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. ரத யாத்திரைவரும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரத யாத்திரைக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்ப்பாளர்களை கைதுசெய்யும் வகையில், நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறுவதற்காக, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலைவரை, நெல்லை மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையைமீறி போராட்டம் நடந்த சென்ற  திருமாவளவன், ஜவாஹிருல்லா மற்றும் சிலரையும், செங்கோட்டையின் வாஞ்சிநாதன் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...