ராமராஜ்ய ரத யாத்திரை தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது.

அயோத்தியில் பிப்., 13ம் தேதி துவங்கிய விஸ்வ இந்துபரிஷத் அமைப்பின் ராமராஜ்ய ரத யாத்திரை, கேரளா, கர்நாடகா உட்பட ஐந்து மாநிலங்களை கடந்து தமிழகத்திற்குள் இன்று அமைதியாக நுழைந்தது.

முஸ்லிம் அமைப்பு களுடன் இணைந்து தி.மு.க., உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றும் சில அமைப்புகள், யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழகத்தில் ரதயாத்திரை செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், ராம ராஜ்ய ரதயாத்திரை உ.பி.,யில் பிப்., 13ம் தேதி துவங்கியது. உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் என ஆறு மாநிலங்களில் இந்தயாத்திரை செல்லும் என அறிவிக்கப்பட்டது. கடைசியாக ராமேஸ்வரத்தில் யாத்திரை முடியவேண்டும்.

இந்த யாத்திரைக்கு மற்ற ஐந்து மாநிலங்களில் எந்த எதிர்ப்பும் இல்லை. குறிப்பாக, காங்., ஆட்சிநடக்கும் கர்நாடகா மற்றும் இடதுசாரி ஆட்சி நடக்கும் கேரளாவில் இந்த யாத்திரைக்கு, அந்த மாநில அரசுகள் எந்த தடையும் விதிக்க வில்லை. நேற்று(மார்ச் 19) இரவு, கேரளா புனலுாரில் யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை, நெல்லை மாவட்டம், கோட்டை வாசலுக்கு வந்த ரதயாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், வாசுதேவநல்லுார் வழியாக, இன்று மதியம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சென்று, இரவு மதுரையை அடைகிறது. வரும் 25ம் தேதி ராமேஸ்வரத்தில் நிறைவு பெறுகிறது. ரத யாத்திரைவரும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரத யாத்திரைக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எதிர்ப்பாளர்களை கைதுசெய்யும் வகையில், நேற்று இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முஸ்லிம் மக்களின் ஆதரவை பெறுவதற்காக, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் சீமான் உள்ளிட்ட சிலர் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக, நேற்று மாலை, 6:00 மணியில் இருந்து, 23ம் தேதி காலைவரை, நெல்லை மாவட்டத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையைமீறி போராட்டம் நடந்த சென்ற  திருமாவளவன், ஜவாஹிருல்லா மற்றும் சிலரையும், செங்கோட்டையின் வாஞ்சிநாதன் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...