பா.ஜ.க., தொடங்கப்பட்ட 38-வது ஆண்டுதினத்தை பா.ஜ.க. இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது. 1951-ம் ஆண்டு ஜன சங்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, 1980-ம் ஆண்டு முதல் பாஜக. என்று பெயர்மாற்றம் பெற்று அரசியல் கட்சியாக உருவெடுத்தது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க. கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்துகொண்டார்.
அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசியவர், கடந்த 1951-ம் ஆண்டு வெறும் 11 உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட ஜன சங்கம் , தற்போது பா.ஜ.க.வாக மாறி 11 கோடி உறுப்பினர்களுடன் உலகில் மாபெரும் கட்சியாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி, நாட்டுமக்களுக்கு பெரியளவில் உதவும் வகையில் குறைந்தது 50 முடிவுகளையாவது எடுத்துள்ளார்.
பிரதமரால் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் திட்டமானது நாட்டில் சுமார் 50 கோடி பேருக்கு மருத்துவ வசதிஅளிக்க உதவியதோடு நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது, என யோகி ஆதித்யாநாத் பேசினார்.
மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியில் பதவி ஏற்ற 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி வரலாற்றுசிறப்புமிக்க நாள் எனவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.