என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது

அதிமுக குறித்து பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைமையிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்ட பள்ளிமாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,“சட்டப்பேரவையில் தைரியமாக முதுகெலும்புடனும், ஆண்மையுடனும் பேசக்கூடிய கட்சியாக அதிமுகவை நான் பார்க்கவில்லை. 4 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும் நம்மால் பலத்தகுரலை எழுப்ப முடிவதில்லை” எனத் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து அதிமுகவினர் பலரும் அவரதுகருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையே உள்ள அரசியல்உறவு சுமூகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து எந்தவித சர்ச்சையும் எழாமல் இருக்க கவனமுடன் செயல் படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இது குறித்து விளக்கமளித்த நயினார் நாகேந்திரன், “அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. நான் கூறியகருத்துக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதிகிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரேஎண்ணம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...