4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது

பா.,ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும்இருந்து பா.ஜனதா தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட 50 ஆயிரம்வாகனங்கள் மற்றும் 28 சிறப்பு ரெயில்களில் வந்தனர்.

பிரமாண்ட மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அமித்ஷா பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

பிரதமர் மோடியின் கனவான புதியஇந்தியாவை படைக்க மீண்டும் பா.ஜ.க.வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்த தொண்டர்கள் உறுதியேற்கவேண்டும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக. ஆட்சியை கைப்பற்றவேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. வெள்ளம்பெருக்கெடுத்து வரும் போது, பாம்புகள், குரங்குகள், பூனைகள் என ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விலங்குகள் உயிர்பிழைப்பதற்காக ஒரே இடத்தில் கூடுவது இயல்பானது. அதுபோலவே, நரேந்திர மோடி எனும் வெள்ளம் இந்திய அரசியலில் பெருக்கெடுத்ததன் விளைவாக, எதிர்க் கட்சிகள் தங்களை காத்துக் கொள்ள கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன

4 ஆண்டு ஆட்சியில் பாரதீய ஜனதா என்ன செய்துவிட்டது என ராகுல் காந்தி கேட்கிறார். 4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை முதலில் அவர் மக்களுக்கு கூற வேண்டும்.

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளார். ஆனால் அந்த தொகுதிகளில் காங்கிரஸ் ‘டெபாசிட்’ கூட பெறவில்லை. தனது கட்சி ‘டெபாசிட்’ இழந்துள்ள ஒரு தேர்தலை இனிப்பு வழங்கி கொண்டாடிய ஒரே தலைவர் நாட்டிலேயே ராகுல் காந்தியாக மட்டும்தான் இருப்பார் என ஆவேசமாக பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...