4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது

பா.,ஜனதா கட்சியின் 38-வது ஆண்டு நிறுவன நாள் நேற்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக மராட்டியத்தின் அனைத்து பகுதிகளிலும்இருந்து பா.ஜனதா தொண்டர்கள் மும்பையில் குவிந்தனர். அவர்கள் பஸ், கார், வேன் உள்ளிட்ட 50 ஆயிரம்வாகனங்கள் மற்றும் 28 சிறப்பு ரெயில்களில் வந்தனர்.

பிரமாண்ட மாநாட்டில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிர முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது அமித்ஷா பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் நேரம் நெருங்கி விட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று பிரதமர் மோடி ஆட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு எடுத்துக்கூறவேண்டும்.

பிரதமர் மோடியின் கனவான புதியஇந்தியாவை படைக்க மீண்டும் பா.ஜ.க.வை முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்த்த தொண்டர்கள் உறுதியேற்கவேண்டும். பாராளுமன்ற தேர்தல் மட்டுமின்றி ஒடிசா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் பாஜக. ஆட்சியை கைப்பற்றவேண்டும்.

பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கூட்டணி அமைக்க முயற்சித்து வருகின்றன. வெள்ளம்பெருக்கெடுத்து வரும் போது, பாம்புகள், குரங்குகள், பூனைகள் என ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற விலங்குகள் உயிர்பிழைப்பதற்காக ஒரே இடத்தில் கூடுவது இயல்பானது. அதுபோலவே, நரேந்திர மோடி எனும் வெள்ளம் இந்திய அரசியலில் பெருக்கெடுத்ததன் விளைவாக, எதிர்க் கட்சிகள் தங்களை காத்துக் கொள்ள கூட்டணி வைக்க முயற்சி செய்கின்றன

4 ஆண்டு ஆட்சியில் பாரதீய ஜனதா என்ன செய்துவிட்டது என ராகுல் காந்தி கேட்கிறார். 4 தலைமுறை ஆட்சியில் காங்கிரஸ் நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை முதலில் அவர் மக்களுக்கு கூற வேண்டும்.

உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தி இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளார். ஆனால் அந்த தொகுதிகளில் காங்கிரஸ் ‘டெபாசிட்’ கூட பெறவில்லை. தனது கட்சி ‘டெபாசிட்’ இழந்துள்ள ஒரு தேர்தலை இனிப்பு வழங்கி கொண்டாடிய ஒரே தலைவர் நாட்டிலேயே ராகுல் காந்தியாக மட்டும்தான் இருப்பார் என ஆவேசமாக பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...