பிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார்

பிரதமர் மோடி 29-ந்தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 20 இடங்களில் நடக்கும் பொதுக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

கர்நாடக சட்ட சபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு, மைசூரு, தாவணகெரே ஆகிய இடங்களில் நடைபெற்ற பா.ஜனதா பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். கர்நாடகத்தில் நடை பெறும் காங்கிரஸ் அரசு, 10 சதவீத கமிஷன் அரசு என்று மோடி குற்றம் சாட்டினார். இதற்கு முதல்-மந்திரி சித்தராமையாவும் பதிலடி கொடுத்தார். சுமார் 2 மாத இடைவெளிக்குபிறகு பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்தில் மீண்டும் பிரசாரம்செய்ய இருக்கிறார்.

கர்நாடக சட்ட சபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 24-ந் தேதி மனுக்களை தாக்கல்செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் தாக்கல்செய்வது முடிந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் வருகிற 29-ந் தேதி பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் பிரசாரத்தை கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இருந்து தொடங்குகிறார்.

அதைத்தொடர்ந்து மே மாதம் 1-ந் தேதி பல்லாரி, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். 3-ந் தேதி சாம்ராஜ்நகர், உடுப்பி, 5-ந் தேதி கலபுரகி, உப்பள்ளி, 6-ந் தேதி சிவமொக்கா, துமகூரு, 7-ந் தேதி மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறும் பா.ஜனதா பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடையே பா.ஜனதாவுக்கு ஆதரவுதிரட்டுகிறார். மே 10-ந் தேதி வரை மோடி 20 பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதாக பா.ஜனதா தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி மட்டுமின்றி பா.ஜனதா தேசியதலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், ராஜஸ்தான் முதல்மந்திரி வசுந்தரராஜே, மராட்டிய மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவீஸ், மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான், கோவா முதல்-மந்திரி மனோகர் பாரிக்கர், சத்தீஸ்கார் முதல்-மந்திரி ராமன்சிங், மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன், உமாபாரதி, ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோரும் கர்நாடகத்தில் முகாமிட்டு பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...