மத்திய அரசு கொலீஜியம் பரிந்துரையை திருப்பி அனுப்பியது தவறில்லை!

உச்ச நீதிமன்றம் ,நீதிபதி கே.எம்.ஜோசஃபை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியம் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு திருப்பி அனுப்பியதில் தவறில்லை என்று கூறியுள்ளது.

உத்தரகாண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் கே.எம்.ஜோசஃபையும், மூத்தவழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்குமாறு, இந்தஆண்டு தொடக்கத்தில் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதில் இந்து மல்ஹோத்ராவை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் lகொண்டுள்ளது. அதேசமயம், கே.எம்.ஜோசஃப் பெயரை மறுபரிசீலனை செய்யுமாறு கொலீஜியத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அகில இந்திய அளவிலான சீனியாரிட்டி  பட்டியலில் கே.எம்.ஜோசஃப் 42 ஆவது இடத்தில் இருப்ப தாகவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் 11 பேர் அவருக்கு சீனியர்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மேலும், கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தும் கே.எம்.ஜோசஃப் நியமனத்தை மத்தியஅரசு நிறுத்தி வைத்திருப்பதால், இந்து மல்ஹோ த்ராவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என இந்திரா ஜெய்சிங் என்ற மூத்த வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இது நினைத்துப் பார்க்கவோ ஏற்கவோ முடியாத கோரிக்கை என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி தீபக்மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் கான்வில்க்கர் (A M Khanwilkar), சந்திரசூட் (D Y Chandrachud) அமர்வு, இதுபோன்ற கோரிக்கைகளை கேள்விப்பட்டதில்லை என்றும் கூறியது. அரசமைப்புச் சட்டப்படி இந்து மல்ஹோத்ரா நியமனம் என்பது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்றும் கூறி இந்திரா ஜெய் சிங் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும், மத்திய அரசு அதன் உரிமை வரம்புக ளுக்குள் நின்றே, பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பி அனுப்பி யிருப்பதாகவும், இதை உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் அரசமைப்புச் சட்டத்தின்படி கொலீஜியம் கையாளும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...