பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளனர்

பா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளதாக மும்பையில் நடந்த விழாவில், முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சிசார்பில் மராட்டிய சட்டமேலவைக்கு தேர்வு செய்யப்பட்டவர் நிரஞ்சன் தவ்காரே. இவர் மறைந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் வசந்த்தவ்காரேயின் மகன் ஆவார். இவரது பதவிகாலம் முடிய ஒரு மாதம் இருந்தநிலையில், திடீரென நேற்று முன்தினம் அவர் தனதுபதவியை ராஜினாமா செய்தார்.

இதைத்தொடர்ந்து மும்பையில் நேற்று நடந்த விழாவில் நிரஞ்சன் தவ்காரே, முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார். பின்னர் முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

வசந்த் தவ்காரே எல்லோருக்கும் தெரிந்தவர், பலஆண்டுகளாக அரசியலில் இருந்தவர். அவரதுமகன் நிரஞ்சன் தவ்காரே கடந்த பலநாட்களாக எங்களுடன் தொடர்பில் இருந்தார். அவர் தேசியகட்சியில் இணைய விரும்பினார். அவர் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நாங்களும் விரும்பினோம். 30 ஆண்டுகளுக்கு முன் பா.ஜனதா சிறியகட்சியாக இருந்தது. மெல்ல, மெல்ல வளர்ந்து தற்போது பா.ஜனதா மிகப் பெரிய கட்சியாகி உள்ளது.

பா.ஜனதாவில் இணைய மேலும் பலர் வரிசையில் உள்ளனர். அவர்களின் பெயர் தேவைப்படும்போது வெளியிடப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசினார்.

 

பா.ஜனதாவில் இணைந்தபிறகு பேசிய நிரஞ்சன் தவ்காரே கூறுகையில், ‘சரத்பவார் மிக ப்பெரிய தலைவர் என்றாலும் பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களில் நம்பிக்கை ஏற்பட்டு பா.ஜனதாவில் இணைந்தேன்’ என்றார்.

இந்தவிழாவில் பா.ஜனதா மாநில தலைவர் ராவ்சாகிப் தன்வே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...