நான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம்

மோடியின் நான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி அரசு பதவி யேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறை வடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் வகையில் பயிர்க்காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்துக் கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.

அயல்நாடுகளில் பதுக்கப் பட்ட கருப்புப்பணத்துக்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்றும்வகையில் வரி ஏய்ப்புச்சட்டம் திருத்தப்பட்டது,

பினாமிசொத்து சட்டத்தின் மூலம் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டது.தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல்செய்ய சட்ட அமலாக்கம் செய்யப்பட்டது.

50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடுதிட்டம், ஒருகோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு அளிக்கப் பட்டுள்ளன.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறுவார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஏழரை கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டன.

இரண்டுலட்சம் கோடி ரூபாய் செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப் படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒருலட்சத்து 69 ஆயிரம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

கடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்திய எல்லைகளை பாதுகாப் பதற்காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குகொண்டு வருவதற்காகவும் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரில் துல்லியத்தாக்குதல்களை நடத்தியது.

ரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம்செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.

2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 சதவீதம் அதிகரிக்கப் பட்டு ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு, பல்வேறு சாதனைகள் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...