பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள்

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொது தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்தபேட்டியில் கூறியிருப்பதாவது:

 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில்செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரம் 67 ஆண்டுகளில் எதுவுமே நிகழவில்லை என்று கூறமுடியாது. ஆனால், ஏழை, நடுத்தரமக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செயல்பட்டுவருகிறது.

குறிப்பாக, சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பும் வகையில் நாம்முன்னேறிய போதிலும் 50 சதவீத மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள கிராமப் புறங்களில் கழிவறைகள் கட்டுவது, அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்குவது, அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி, அனைவருக்கும் வீடு, சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மோடி தலைமையிலான அரசு செயல் படுத்தி வருகிறது. இதனால் 2019-ல் நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திரமோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிக்கப் போகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...