வெளிநாட்டு உதவிகளை பெறுவதில்லை எனும் கொள்கையை அரசு மரபாக பின்பற்றுகிறது

வெளிநாடுகளில் இருந்து உதவிகளை பெறுவதில்லை என்றகொள்கையை கடந்த காங்கிரஸ் அரசில் இருந்து 14 ஆண்டுகளாக மரபாக அரசு பின்பற்றிவருகிறது என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன் தானம் விளக்கம் அளித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளமாநிலத்துக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து நிதியுதவியும், நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசுசார்பில் இதுவரை 680 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கேரள அரசு கோரிக்கை விடுக்காமலே, கேரளமாநிலத்தின் நிலையை பார்த்து, ஐக்கிய அரபு அமீரக அரசு 700 கோடி ரூபாய் நிதியு தவியை மாநில புனரமைப்புக்கு தருவதாக அறிவித்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு நன்றிதெரிவித்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து உதவி பெறுவதில்லை என்று கூறி மறுத்துவிட்டது.

கடந்த 14 ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து எந்த விதமான நிதியுதவியையும் பெறுவதில்லை என்பதை கொள்கையாக வைத்திருக்கிறது அரசு என்று விளக்கம் அளித்தது. ஆனால், மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குக் கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

போதுமான உதவியை மத்திய அரசு வழங்காத போது, தாமாக முன்வந்து அளிக்கும் ஐக்கிய அரசு அமீரக உதவியை பெறவிடாமல் மறுப்பது அரசியல் காழ்ப் புணர்ச்சியாகும் என்று கேரள அரசியல்வாதிகள் விமர்சித்தனர்.

இதுதொடர்பாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், மழையால் பாதிக்கப்பட்ட எங்கள் மாநிலத்தின் புனரமைப்புக்கு 2200 கோடி ரூபாய் கேட்டிருந்தோம், ஆனால், மத்தியஅரசு 600 கோடி ரூபாய் மட்டுமே அளித்தது.

ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து கேரள அரசு உதவி ஏதும் கேட்க வில்லை. அவர்கள் தாமாகவே முன்வந்து உதவி அளிக்கிறார்கள் எனத்தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கேரள அரசியல்வாதிகளுக்கு விளக்கம் அளித்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும், மத்திய அமைச்சருமான அல்போன்ஸ் கண்ணன்தானம் டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வெளிநாடுகளில் எந்தவிதமான நிதியுதவிகளையும் பெறுவதில்லை என்றமுடிவு, கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசால் எடுக்கப்பட்டது. அப்போது இருந்து, இந்தக்கொள்கையை ஒரு மரபாக அரசு பின்பற்றி வருகிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் காலத்தில், கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ஏராளமான பொருட்சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது, பல்வேறுநாடுகள் இந்தியாவுக்கு முன்வந்து நிதியுதவி அறிவித்தன. ஆனால், அந்த நிதியுதவியைப் பெறுவதற்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். இதை அப்போதிருந்தே அரசு கொள்கையாக பின்பற்றி வருகிறது இவ்வாறு அல்போன்ஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...