சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்

இந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவான போது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறுசிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது.

சமஸ்தானங்கள் அனைத்தும் சுமுகமாக இந்தியாவுடன் இணைய சம்மதித்த நிலையில் 3 மட்டும் முரண்டுபிடித்தன. அதில் ஒன்றுதான் ஹைதராபாத். அன்றைய ஹைதராபாத் மாகாணம் என்பது.. தெலுங்கானா மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் சிலபகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இருந்தன.

சமஸ்தான மன்னர் நிஜாம் முஸ்லீம். ஆனால், மக்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்.

ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைய விரும்ப வில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் commonwealth நாடு போல தொடர விரும்புவதாகவும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல நேருவிற்கு இதை சமாளிக்க தெரியவில்லை. காஷ்மீரைபோல , தனி அந்தஸ்து கொண்ட நிலப்பரப்பாக ஹைதராபாத் இயங்குவதற்கு சம்மதித்திருந்தார் நேரு !

அது மட்டும் நடந்திருந்தால்..இந்தியாவின் மத்தியபகுதியில் .. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிறைந்த இன்னொரு காஷ்மீராக ஹைதராபாத் மாறி இருக்கும் ! பல உயிர்களை இன்றளவும் பலி வாங்கிக் கொண்டிருக்கும் !

நிஜாம் அதோடு நிற்கவில்லை. கோவா-வை வாங்கி தன்னுடைய கடல் வழிப் பாதையை அமைத்துக் கொள்ள திட்டம்தீட்டினார். மேலும், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வரவழைத்து…இந்தியாவிற்கு எதிராக போராட தயாரானார். அழுத்தம் அதிகரித்தபோது …பாகிஸ்தானுடன் இணைய விரும்புவதாக அறிவித்தார்.

ஆக…நேருவின் இயலாமையை பறைசாற்றும் காஷ்மீர் போன்ற குழப்பமான தனி அந்தஸ்தையும் நிஜாம் ஏற்று கொள்ள வில்லை !

இந்தியாவின் நட்ட நடுப்பகுதியில் இருந்துகொண்டு.. பாகிஸ்தானுடன் இணைவேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்!

ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்களோ 90% இந்துக்கள்.

நேரு செய்வதறியாது முழித்து கொண்டிருந்த நிலையில், சிலமாதங்கள் வரை பொறுத்துப்பார்த்த படேல் தான்… ராணுவத்துடன் சென்று நான்கே நாட்களில் நிஜாமின் படையை முறியடித்து ..நிஜாம் சம்மதித்து போட்ட கையெழுத்து கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார்.

மத அடிப்படை யிலான இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த இந்த இருபக்க செயல்பாடுகளை….முஸ்லீம் மக்களை கொன்றார் படேல் என்று சற்றே மடைமாற்றி சொல்வது.. ..அரசியல் வாக்குவங்கிக்காக….இந்து -முஸ்லீம் பிரிவினையை அணையாமல் தூண்டிக் கொண்டிருக்க உதவும். அவ்வளவுதான்.

பானு கோம்ஸ்

One response to “சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...