சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்

இந்து -முஸ்லீம் என்று மத அடிப்படையில் இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை உருவான போது..இந்திய பகுதிக்குள் சிதறுண்டு கிடந்த சிறுசிறு சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் பொறுப்பு வல்லபாய் படேலினுடையதாக இருந்தது.

சமஸ்தானங்கள் அனைத்தும் சுமுகமாக இந்தியாவுடன் இணைய சம்மதித்த நிலையில் 3 மட்டும் முரண்டுபிடித்தன. அதில் ஒன்றுதான் ஹைதராபாத். அன்றைய ஹைதராபாத் மாகாணம் என்பது.. தெலுங்கானா மற்றும் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் சிலபகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியவையாக இருந்தன.

சமஸ்தான மன்னர் நிஜாம் முஸ்லீம். ஆனால், மக்களில் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள்.

ஹைதராபாத் நிஜாம், இந்தியாவுடன் இணைய விரும்ப வில்லை என்றும், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் commonwealth நாடு போல தொடர விரும்புவதாகவும் தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல நேருவிற்கு இதை சமாளிக்க தெரியவில்லை. காஷ்மீரைபோல , தனி அந்தஸ்து கொண்ட நிலப்பரப்பாக ஹைதராபாத் இயங்குவதற்கு சம்மதித்திருந்தார் நேரு !

அது மட்டும் நடந்திருந்தால்..இந்தியாவின் மத்தியபகுதியில் .. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிறைந்த இன்னொரு காஷ்மீராக ஹைதராபாத் மாறி இருக்கும் ! பல உயிர்களை இன்றளவும் பலி வாங்கிக் கொண்டிருக்கும் !

நிஜாம் அதோடு நிற்கவில்லை. கோவா-வை வாங்கி தன்னுடைய கடல் வழிப் பாதையை அமைத்துக் கொள்ள திட்டம்தீட்டினார். மேலும், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களை வரவழைத்து…இந்தியாவிற்கு எதிராக போராட தயாரானார். அழுத்தம் அதிகரித்தபோது …பாகிஸ்தானுடன் இணைய விரும்புவதாக அறிவித்தார்.

ஆக…நேருவின் இயலாமையை பறைசாற்றும் காஷ்மீர் போன்ற குழப்பமான தனி அந்தஸ்தையும் நிஜாம் ஏற்று கொள்ள வில்லை !

இந்தியாவின் நட்ட நடுப்பகுதியில் இருந்துகொண்டு.. பாகிஸ்தானுடன் இணைவேன் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்!

ஹைதராபாத் சமஸ்தானத்தின் மக்களோ 90% இந்துக்கள்.

நேரு செய்வதறியாது முழித்து கொண்டிருந்த நிலையில், சிலமாதங்கள் வரை பொறுத்துப்பார்த்த படேல் தான்… ராணுவத்துடன் சென்று நான்கே நாட்களில் நிஜாமின் படையை முறியடித்து ..நிஜாம் சம்மதித்து போட்ட கையெழுத்து கொண்டு ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்தார்.

மத அடிப்படை யிலான இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த இந்த இருபக்க செயல்பாடுகளை….முஸ்லீம் மக்களை கொன்றார் படேல் என்று சற்றே மடைமாற்றி சொல்வது.. ..அரசியல் வாக்குவங்கிக்காக….இந்து -முஸ்லீம் பிரிவினையை அணையாமல் தூண்டிக் கொண்டிருக்க உதவும். அவ்வளவுதான்.

பானு கோம்ஸ்

One response to “சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேல்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...