இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான்

மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இதொய்பா பயங்கரவாத அமைப்பு காரணமாக செயல்பட்டதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்பு கொண்டுள்ளார்.

மும்பை நகரில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ல், கடல்வழியாக புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 166 பேர் உயிரி ழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி தூக்கிலிடப்பட்டான் . இந்நிலையில், இது குறித்து இரு நாடுகளிலும் தீவிரவிசாரணை இன்றுவரை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்தது. இந்நிலையில், அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், மும்பை தாக்குதல் குற்றவாளிகளை தண்டிக்க பாகிஸ்தான் அரசு முனைப்புகாட்டி வருவதாக தெரிவித்தார்.

மேலும், மும்பைத்தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் மண்ணில் இருந்தே சதித் திட்டம் தீட்டப் பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு காரணமாக செயல் பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் ஒப்புதலுக்கு, இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு, நம் ராணுவத்தின் தலைமை தளபதியான, ஜெனரல் பிபின் ராவத் கூறியதாவது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒப்புக் கொண்டது நல்ல விஷயம்தான். ஆனால், மும்பை தாக்குதலை யார்நடத்தினர் என்பது, உலகத்தில் உள்ள அனைவருக்கும், ஏற்கனவே தெரியும். அதை, தற்போது அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...