நான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளேன்

மணிப்பூரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, பிரேன் சிங் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், நேற்று, முக்கியத்துவம் வாய்ந்த, எட்டு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்தார். உணவு பதப்படுத்தும் கிடங்கு, நீர் பாசன திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உள்ளிட்டவை, பிரதமரால் துவக்கப்பட்டன.

அப்போது, மோடி பேசியதாவது: மணிப்பூரில், 125 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுவெறும், சோதனை சாவடி மட்டுமல்ல; இதில், அதிநவீன அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் சுற்றுலா வளாகம், ஒருங்கிணைந்த சுற்றுலாதலம், நீர்பாசன திட்டம் ஆகியவையும் துவக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களால் மக்களின் வாழ்க்கைமுறை மிகவும் சுலபமாக மாறும். குறிப்பாக, குழந்தைகளும் விவசாயிகளும் பலனடைவார்கள். முந்தைய மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போட்டப்பட்டிருந்தன. தங்களுக்கும் டெல்லிக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருப்பதாக மக்கள் கருதிவந்தனர். எங்கள் ஆட்சியில் இந்த தூரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் மணிப்பூரில் உள்ள கடைக்கோடி கிராமம்வரை மின்சாரவசதிகளை செய்து கொடுத்திருக்கிறோம். டெல்லி தங்களுக்கு மிகவும் அருகாமையில் உள்ளதாக மக்கள் நினைக்கும் வகையில் எங்கள் பணிகள் விரைவாக இருக்கும்.

பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் கடந்த நான்கரை ஆண்டுகளில் 30 முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளேன். நாடுமுழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்யும்போது அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் அதிகரித்துவருவதை கண்டு பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...