பிரதமரை சந்தித்த அருள்மொழி சரவணன்

இவர் பெயர் திருமதி. அருள்மொழி சரவணன். மதுரையில் ஒரு சிறிய வாடகை வீட்டில் வசிக்கிறார். இவர் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் கடன் பெற்று சிறு அளவில் வியாபாரம் செய்து வந்தார்.

இதை தவிர அரசு கொள்முதல் செய்யும் e – Market Place {GEM} என்ற வெப்சைட்டிலும் இவரது நிறுவனத்தை பதிந்து வைத்துள்ளார். இவர் வியாபாரம் செய்யும் பொருட்களில் ஒன்றான தெர்மோஸ் வகை பிளாஸ்க்குகள் பிரதமர் அலுவலகத்தில் தேவைப்படுவதை ஜெம் வெப்சைட்டில் பார்த்து தான் விற்பனை செய்ய விரும்புவதாய் தகவல் அனுப்பியுள்ளார். பிரதமர் அலுவலகமும் அவருக்கு ஆர்டர் அளித்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியில் முறைப்படி சப்ளை செய்து நன் மதிப்பை பெற்றார்.

முத்ரா கடன் பற்றி குறிப்பிடும் போது 2017 ல் பிரதமர் மன்கி பாத் நிகழ்ச்சியில் பெண்கள் தொழில் முனைவர்களாக உயர வேண்டியதின் அவசியத்தை இவரது பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார். இதனால் இவர் வியாபாரம் செழித்து பல அரசு / தனியார் அலுவலகத்தில் இருந்து பல ஆர்டர்கள் வந்து குவிந்துள்ளது.

படிப்படியாக வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி அடைந்ததும் தொழிலை இன்னும் விரிவுபடுத்த எண்ணி முறையாக வரி செலுத்திய விபரங்களுடன் வங்கியை அணுகி மேலும் கடன் பெற்று இன்று இவரது வருட டர்ன் ஒவர் இன்று 1 கோடியை நெருங்கி விட்டதாம். 😮😮

தவிர திருமதி. அருள்மொழி சரவணன் தமது வியாபார மற்றும் குடும்ப வளர்ச்சியை பற்றி ஒவ்வொரு முறையும் பிரதமருக்கு பல கடிதங்கள் எழுதி இருக்கிறார். அதிலும் எப்போதும் பிரதமருக்கு கடிதம் எழுதும் போது “அன்புள்ள அப்பா” என்று குறிப்பிட்டே எழுதுவாராம்.

இந்நிலையில் பிரதமர் மதுரை வருவதை அறிந்ததும் தாம் வாழ்வு சிறக்கவும் குடும்பம் முன்னேற்றம் அடையவும் காரணமான முத்ரா வங்கி கடனே என்று அனைத்து விபரத்தையும் கடிதமாக எழுதி பிரதமரை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு விருப்பமும் தெரிவித்துள்ளார்.

இதை அறிந்த பிரதமர் கண்டிப்பாக சந்திக்கிறேன் என்று பதில் கடிதமும் எழுதி இன்று தமது மதுரை விசிட்டில் திருமதி. அருள்மொழி சரவணனை சந்திந்து பேசியுள்ளார்.

அடுத்த திட்டம் என்ன? என்று பிரதமர் கேட்டதற்கு வீட்டு கடன் அப்ளை செய்துள்ளேன். விரைவில் புது வீட்டுக்கு குடிப் போக போகிறேன் என்று நன்றி கலந்த மகிழ்ச்சியை தெரிவித்த திருமதி. அருள்மொழி சரவணனுக்கு தமது வாழ்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர்.

அதனால் தான் உரக்க கூவுவோம்.

கோ பேக் மோடி அதானேடா?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...