தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா

காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்ததாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆவேசமாக அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு, அனைத்துகட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பலகட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த றகு எதிர்க் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதற்காக நடத்தப்படும், முதலாவது, அனைத்துகட்சி கூட்டம் இதுதான் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் ஊரிபகுதியில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம், துல்லியதாக்குதல் நடத்தியது.

தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் அனைத்துகட்சி தலைவர்களை அழைத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால் முதல் முறையாக, அனைத்து கட்சிகளின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை மோடி அரசு இப்போது எடுத்துள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று, அனைத்து பாதுகாப்பு படைத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறை அமைப்பின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயாராக இருக்க வேண்டும்..எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) ஜம்மு காஷ்மீர் எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லையில் கூடுதல் படைகளை குவித்து வைக்கும்படியும் அஜித் தோவல் அப்போது அறிவுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று காலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது இது இந்தியா முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராவதையே காட்டுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...