தாக்குதலுக்கு தயாராகும் இந்தியா

காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு நாளை அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் துணை ராணுவப்படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்ததாக்குதலுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஆவேசமாக அறிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு, அனைத்துகட்சி கூட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி உள்ளிட்ட பலகட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த றகு எதிர்க் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுவதற்காக நடத்தப்படும், முதலாவது, அனைத்துகட்சி கூட்டம் இதுதான் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் ஊரிபகுதியில் ராணுவத்தினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம், துல்லியதாக்குதல் நடத்தியது.

தாக்குதல் நடத்தப்பட்ட மறுதினம் அனைத்துகட்சி தலைவர்களை அழைத்து மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப் பட்டது. ஆனால் முதல் முறையாக, அனைத்து கட்சிகளின் ஆலோசனையை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சியை மோடி அரசு இப்போது எடுத்துள்ளது. பாகிஸ்தானிற்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு எதிராகவும் எந்தமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதில் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இன்று, அனைத்து பாதுகாப்பு படைத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறை அமைப்பின் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது எந்த ஒரு நடவடிக்கைக்கும் தயாராக இருக்க வேண்டும்..எல்லை பாதுகாப்பு படையினர் (BSF) ஜம்மு காஷ்மீர் எல்லையில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லையில் கூடுதல் படைகளை குவித்து வைக்கும்படியும் அஜித் தோவல் அப்போது அறிவுறுத்தி உள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்கு ராணுவத்திற்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடியும் இன்று காலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது இது இந்தியா முழு அளவிலான தாக்குதலுக்கு தயாராவதையே காட்டுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...