3-வது கட்டபட்டியலை பாஜக வெளியிட்டது

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 3-வது கட்டபட்டியலை பாஜக நேற்று நள்ளிரவில் வெளியிட்டது. இதில் 2-வது இடமாக பூரியில் பிரதமர்மோடி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியில் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பிரதமர் மோடி 2-வதாக போட்டியிடும் இடம் குறித்த ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

3-வது கட்டமாக பாஜக சார்பில் 36 வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப் பட்டனர், இதில் மகாராஷ்டிராவில் 6 வேட்பாளர்களும், ஒடிசாவில் 5 வேட்பாளர்களும், அசாம், மேகாலயாவில் ஒருவேட்பாளரும் மக்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இது தவிர்த்து ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தலோடு சேர்த்து சட்டப் பேரவைக்கு நடைபெறும் தேர்தலுக்காக 22 சட்டப்பேரவை வேட்பாளர்களையும் பாஜக அறிவித்தது.

இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக சார்பில் இருக்கும் தற்போதுள்ள 6 எம்.பி க்களுக்கு மீண்டும்வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் மகளும், தற்போது பாரமதி தொகுதி எம்.பியாக இருக்கும் சுப்ரியா சுலேவுக்கு எதிராக பெண்வேட்பாளரை பாஜக நிறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து பாஜக 25 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. 25 இடங்களில் 22 இடங்களுக்கான வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது எம்.பியாக இருக்கும் கிரிஷ்பாபத், அனில் ஷிரோல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப் படவில்லை.

அசாம் மாநிலத்தில் மாநில அமைச்சராக இருக்கும் பாலப்லோச்சனுக்கு தேஜ்பூரில் வாய்ப்பு வழங்கப்பட்டு, அந்ததொகுதி எம்.பியாக இருக்கும் ராம் பிரசார் சர்மாவுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...