ஊழல்வாதிகள் மீண்டும் சிறுவாய்ப்பு கிடைத்தாலும், இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள்

ஊழல்வாதிகளுக்கு ஒரு சிறுவாய்ப்பு கொடுத்தாலும், நமதுநாட்டை பழைய நிலைக்கு கொண்டு சென்று விடுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி மீரட் தேர்தல்பிரச்சாரத்தில் இன்று எச்சரித்தார். உத்தரபிரதேச மாநிலம் மீரட்நகரில் இன்று மதியம் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றினார். மிஷன் சக்தி திட்டத்தின் வெற்றிக்கு பிறகு நடைபெற்ற, முதல்கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது: ஒவ்வொரு குடிமக்களுக்கும் வங்கிகணக்கு துவங்கியபோது, யாரெல்லாம் கேலி பேசினார்களோ, அவர்கள் இப்போது, அதேவங்கி கணக்கில் பணம் செலுத்துகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். பாஜக அரசு இப்படி அனைவருக்கும் வங்கிகணக்கை துவங்கியிருக்கா விட்டால் பணம் எப்படி செலுத்தமுடியும்.

வங்கி கணக்கு துவங்கியது முந்தைய ஆட்சிகளை போல இடைத்தரகர்கள் சாப்பிட்டுவிட கூடாது என்பதற்காகத்தான். இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களும், மோடி அரசுதான் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். 5 வருடங்கள் முன்பாக நான் உங்கள் ஆசியை நாடிவந்தேன். எனக்கு நிறைய அன்பை கொட்டிக் கொடுத்தீர்கள். வரும் லோக் சபா தேர்தல் மக்களின் எதிர்பார்ப்பு, கனவுகளை பூர்த்திசெய்ய உதவும் தேர்தல் என்பதை மறக்காதீர்கள்.

இந்தியாவில் முதல்முறையாக 2.5 கோடி குடும்பங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர். ஊழல்வாதிகள் மீண்டும் சிறுவாய்ப்பு கிடைத்தாலும், இந்த நாட்டை பின்னோக்கி இழுத்துச் சென்று விடுவார்கள். அவர்களுக்கு சிறுவாய்ப்பும் கொடுத்துவிடாதீர்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள:

நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ...