கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட வீரவநல்லுார் ஓட்டுச்சாவடியில் பா.ஜ.க.,வினர் அ.ம.மு.க வினர் இடையே ஏற்பட்ட மோதலில். பா.ஜ.க.,வினர் 4 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட பூதப்பாண்டியை அடுத்த வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று வாக்குப்பதிவு நடந்தது. அப்போது, வாக்குச்சாவடிக்குள் பூத் சிலிப் கொடுக்கும்போது பாஜக, நிர்வாகிகளுக்கும் அ.ம.மு.க நிர்வாகிகளுக்குமிடையே கேலிப் பேச்சு எழுந்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியேவந்த பா.ஜ.க-வினரிடம், அ.ம.மு.க, தி.மு.க, காங்கிரஸ் பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
அதில், பா.ஜ.க-வைச் சேர்ந்த சதீஷ், பழனியப்பன், மணிகண்டன், பரமேஸ்வரன், சரவணன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள், ஆசாரி ப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொண்டர்களை கன்னியாகுமரி தொகுதி பாஜக. வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.