சென்னை வெள்ள பிரச்னையை திசை திருப்பவே தி.மு. க வினர் கவர்னர் விவகாரத்தை கையில் எடுக்கின்றனர் – L .முருகன் பேட்டி

 ‘சென்னை வெள்ள விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

 இந்தி மாத கொண்டாட்ட விவகாரத்தில் தி.மு.க.,வின் குற்றச்சாட்டு மக்களை திசை திருப்பும் செயல். மத்திய பா.ஜ., அரசு தமிழுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. எல்லாம் விஷயத்திலும் அரசியல் செய்யக் கூடாது. சென்னை வெள்ளம் விவகாரத்தை திசை திருப்பவே கவர்னர் பிரச்னையை தி.மு.க,.,வினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் கவர்னரை தொடர்புபடுத்துவது சரியல்ல.

தி.மு.க., நினைக்கும் அரசியல் எல்லாம் இப்பொழுது பண்ண முடியாது. மக்கள் தெளிவாக இருந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தி மொழிக்கு யாரும் ஆதரவாளர்கள் கிடையாது. அதேநேரத்தில் எதிர்ப்பாளர்களும் கிடையாது. சி.பி.எஸ்.,இ., பள்ளியில் இந்தி ஒரு மொழியாக இருக்கிறது எனக் கூறி பள்ளி நடத்தும் தி.மு.க.,வினர் இழுத்து மூட ரெடியா? இது அவர்களுக்கு வருமானத்தை கொடுக்கிறது.

தி.மு.க.,வினர் ஆக்கபூர்வமான அரசியலை செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை ஒழியுங்கள். தமிழகத்தை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தீட்டுங்கள். மொழிகளை வைத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். தமிழை உலக அளவில் எடுத்து செல்வதில் முதன்மையாக இருப்பது பிரதமர் மோடி தான். ஒட்டுமொத்த தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நிலவேம்புவின் மருத்துவக் குணம்

காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.