யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் பிரதமர் மோடி மீண்டும் போட்டி யிடுகிறார்.  இதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல்செய்தார்.

வேட்புமனு தாக்கலுக்கு முந்தைய நாள், அதாவது ஏப்ரல் 25-ம் தேதிதான் போட்டியிடும் தொகுதியில் மிகப் பெரும் பேரணி நடத்தினார் பிரதமர் மோடி. வாரணாசியில் தனக்குள்ள செல்வாக்கை காட்டுவதற்காகப் பேரணி நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது. இந்த மெகாபேரணியில் பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், கூட்டணிக் கட்சி தலைவர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்ற ஆயிரக் கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து நேற்று பெரும்படையை திரட்டிச் சென்று வேட்பு மனுத் தாக்கல்செய்தார் மோடி. அதற்கு முன்னதாக தன் வேட்புமனுவைப் பெண் ஒருவரிடம் அளித்து அவரின் காலில் விழுந்து வணங்கினார். பிரதமர் காலில் விழுந்துவணங்கிய அந்தப் பெண் யார் என்ற கேள்வி நேற்று முதல் சமூகவலைதளங்களைச் சுற்றி வருகிறது. தற்போது அவரை பற்றியதகவல்கள் வெளிவந்துள்ளன.

 

அன்னபூர்ணா சுக்லா என்ற 91 வயதான கல்வியாளரிடம்தான் மோடி ஆசிபெற்றார். வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன் மொழிந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் சுதந்திரப் போராட்ட வீரரும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை நிறுவியவருமான பண்டிட் மதன்மோகன் மால்வியாவின் வளர்ப்பு மகள். அன்னபூர்ணா நாற்பது ஆண்டுகளாகக் காசியில் உள்ள ஒருகல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார். தற்போது அவருக்கு 91 வயது ஆனபோதிலும் சமூகப் பணிகளை மிகவும் ஆர்வமாகச் செய்து வருகிறார்.

இதுபற்றி இந்தியா டுடே பத்திரிகைக்கு அன்னபூர்ணா அளித்துள்ள பேட்டியில்,  “நான் ஒருதாயை போலத்தான் மோடியை ஆசீர்வாதம் செய்தேன். அவர் உணர்ச்சிவசப் பட்டார். பின்னர் என் காலில் விழுந்தார். கடந்த ஐந்து வருடங்களாக இந்தியாவின் வளர்ச்சிக்காக மோடி நிறையபணிகளை செய்துள்ளார். வாரணாசியில் இருந்த போக்குவரத்து சீரமைக்கப் பட்டுள்ளது. சாலைகள் அகலப்படுத்த பட்டுள்ளன. அவரின் வளர்ச்சிப் பணி தொடர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

One response to “யார் இந்த அன்னபூர்ணா சுக்லா?”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...