தனது வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திதார். அப்போது பேசியவர், வாஜ்பாய்க்குப் பின் தேசியளவில் செல்வாக்குபெற்ற தலைவராக மோடி இருக்கிறார். தேசியளவில் நேரு, இந்திரா போலவும், தமிழகத்தில் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போல மக்களை ஈர்க்க கூடிய தலைவராக மோடி உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்றவெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி.
தமிழகத்தில் மோடிக்கு எதிரான மனநிலை இருக்கிறது. அதனால்தான் பாஜகவுக்கு தோல்வி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலை வீசிவிட்டால் அதைமாற்றுவது கடினம். மோடியின் எதிர்ப்பலையால் தமிழகத்தில் மற்றவர்கள் வென்றுள்ளனர். நீட், மீத்தேன், கெயில் எரிவாயுத் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகளின் சூறாவளி பிரச்சாரம்தான் தமிழகத்தில் பாஜகவின் தோல்விக்கு காரணம்.
கோதாவரி-கிருஷ்ணா-காவிரி நதிகளை இணைக்க நடவடிக்கைக் எடுக்கப்படும் என நிதின்கட்கரி கூறியது பாராட்டுக்குரியது. தமிழகத்தில் பாஜக தோல்வி அடைந்தபிறகும், நிதின் கட்கரி நதிகளை இணைப்பதை குறித்து பேசியது பாராட்டுக்குரியது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என நம்புகிறேன்.
புதியதாக கட்சி ஆரம்பித்து, மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைபெற்ற கமல்ஹாசனுக்கு பாராட்டுக்கள். காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும்முடிவை ராகுல் கைவிடவேண்டும். காங்கிரஸில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களை கையாள்வதில் ராகுலுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி எவ்வளவு முக்கியமோ, அதேபோல எதிர்க் கட்சியும் மிகவும் முக்கியம். பாஜக-வின் அழைப்பை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி செல்கிறேன். என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |