அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றி பெறலாம்

அரசு பள்ளியில் படித்த தையல் தொழிலாளியின் மகள், நீட்தேர்வில் 605 மதிப் பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

2019-20-ம் ஆண்டுக்கான நீட்தேர்வு கடந்த மே மாதம் 5-ம் தேதிநடைபெற்றது. இதில் நாடுமுழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் எழுதினா். இத்தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அரசு பள்ளியில் படித்த தையல்தொழிலாளியின் மகளான ஜீவிதா, இத்தேர்வில் 605 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

சென்னையை அடுத்த அனகா புத்தூரைச் சேர்ந்த தையல் தொழிலாளியான பன்னீர் செல்வம் என்பவரின் மகள்தான் ஜீவிதா. பன்னீர்செல்வத்துக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது 3 மகள்களையும் அனகா புத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கவைத்தார். இதில் ஜீவிதாகடந்த 2015-ம் ஆண்டு, 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்றார். இதைத் தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் 1,161 மதிப்பெண்கள் பெற்றார்.

மருத்துவராக விரும்பிய ஜீவிதா, பிளஸ் 2 படிக்கும் போதே நீட் தேர்வுக்கும் தன்னை தயார் படுத்திக் கொண்டார். இதற்காக சில மாதங்கள் டியூஷனுக்கு சென்ற இவர், அதன்பிறகு ஃபீஸ்கட்ட பணம் இல்லாததால் வீட்டில் இருந்தபடி சொந்த முயற்சியில் நீட்தேர்வுக்கு படித்தார். நூலகத்தில் இருந்தும் நண்பர்களிடம் இருந்தும் புத்தகத்தை இரவல் வாங்கி படித்து நீட்தேர்வுக்கு இவர் தயாரானார்.

இந்நிலையில் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 605 மதிப்பெண் எடுத்துள்ள ஜீவிதா, அகில இந்திய அளவில் 6,678-வது இடத்தையும், ஓபிசி பிரிவில் 2,318-வது இடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் இவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட்கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கல்வியாளர்கள் தெரி விக்கின்றனர். இதனிடையே நீட்தேர்வில் ஜீவிதா வெற்றி பெற்றாலும் கட்டணம் செலுத்த என்ன செய்வது என குடும்பம் தவித்து வருகிறது.

இதுகுறித்து ஜீவிதா கூறும்போது, “எனது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. எங்கள் அப்பா ஒருதையல் கடையில் வேலை செய்து வருகிறார். அதில்வரும் வருமானத்தில் படிக்க வைத்தார். ஏழை குடும்பத்தில் பிறந்ததால் மருத்துவராக முடியுமா? என பலநாட்கள் நினைத்துள்ளேன். என் அப்பா, அம்மா மற்றும் ஆசிரியர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தனர். இதன் விளைவாக நான் நீட் தேர்வில் தேர்ச்சியடைந் துள்ளேன்” என்றார்.

ஜீவிதாவின் தாயார் பவானி கூறும்போது, “சிறு வயதுமுதலே மருத்துவராக வேண்டும் என்று ஜீவிதா அடிக்கடி கூறுவார். அதற்குநான், ‘நன்றாகப் படித்தால் மருத்துவர் ஆகலாம். மற்றபடி அதற்காக எங்களால் செலவுசெய்ய முடியாது’ என்று கூறிவந்தேன். இதை வைராக்கியமாக கொண்டு ஜீவிதா நல்ல முறையில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதனிடையே அவரது மருத்துவ படிப்புக்கு உதவுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நீட்தேர்வில் வெற்றிபெற்ற சென்னை அனகாபுத்தூரை சேர்ந்த ஏழை தையல் தொழிலாளர் மகள் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவ கல்லூரி கட்டணசெலவை ஏற்றுக்கொள்கிறேன்.

ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவ கனவு நனவாகட்டும்… மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என பதிவிட்டார். இந்த நிலையில், நீட்தேர்வில் வெற்றி பெற்ற சென்னை அரசு பள்ளி மாணவி ஜீவிதாவை நேரில் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் முதற்கட்டமாக ரூ 50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, நீட்தேர்வு குறித்து அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசுவதை அரசியல்கட்சி தலைவர்கள் தவிர்க்க வேண்டும். தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டுவராது என கூறினார். தமிழிசை செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த ஜீவிதா, அரசுப்பள்ளியில் படித்தாலும் நீட் தேர்வில் வெற்றிபெறலாம் என்றும், மாணவர்கள் தோல்வியை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...