திருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற்கு முத்தலாக்

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணையாக இருசக்கரவாகனம் கொடுக்கப்படாததால் திருமணமான 24 மணிநேரத்தில் இளம் பெண்ணிற்கு ஒருவர் முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச்சேர்ந்தவர் ஷாஹே ஆலம் என்பவருக்கும் ருக்சனாபனோ என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூலை 13-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்புகூறியபடி, பெண்வீட்டார் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்காததால், திருமணமான 24 மணிநேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஷாஹே ஆலம் விவாகரத்து செய்துள்ளார்.

இதனால், மணப்பெண்ணும், பெண்வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து, பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்தின்கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்தும் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான முந்தைய அரசு முத்தலாக் மூலம் விவாகரத்துபெறும் நடைமுறையை நீக்குவதற்காக மக்களவையில் சட்டமசோதா கொண்டுவந்து நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில் நிறைவேற்றாமல் நிலுவையில் இருந்தது. பின்னர் இதற்காக 2 முறை அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான 2-வது ஆட்சியில் நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் கடந்தமாதம் முத்தலாக் தடை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...