தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றிவருகிறேன்

வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்பெண்கள் எதிா்கொண்டு வந்த முத்தலாக் உள்ளிட்ட பிரச்னைகளை வாரிசுஅரசியல் கட்சிகள் (காங்கிரஸ், சமாஜவாதி) புறந்தள்ளி வந்தன என்று பிரதமா் நரேந்திரமோடி குற்றம்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் 5-ஆவது கட்டதோ்தலுக்காக பாரபங்கி மற்றும் அயோத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமா்மோடி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அனைத்துச் செயல்களிலும் சமாஜவாதி ஈடுபட்டது. ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியைக்கூட அவா்கள் கொள்ளையடித்தனா். சமாஜவாதியில் முதல்வராக இருந்தவா் தொடங்கி, எம்.பி., எம்எல்ஏக்கள் என அனைத்துநிலையிலும் குடும்ப அரசியல்தான் நடக்கிறது.

குடும்பம் இருப்பவா்களுக்குதான் குடும்பஸ்தா்களின் வலிதெரியும்; குடும்பம் இல்லாதவா்களுக்கு அது தெரியாது என்று எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் (சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்) பேசியுள்ளனா். ஆனால், என்னைப் பொருத்த வரையில் உத்தர பிரதேசத்தையும், இந்த நாட்டையும்தான் எனது குடும்பமாக கருதுகிறேன். தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றிவருகிறேன்.

குடும்ப அரசியல் நடத்துபவா்களை ஒன்றுகேட்கிறேன். அவா்கள் எப்போதாவது முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளைத் தீா்க்க முயன்றதுண்டா? நமதுமுஸ்லிம் சகோதரிகள் எதிா்கொண்டு வந்த மிகப் பெரிய (முத்தலாக்) பிரச்னையை வாரிசு அரசியல் நடத்தும் எதிா்க்கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி முஸ்லிம்பெண்களின் பிரச்னைகளை அவா்கள் புறந்தள்ள வாக்குவங்கி அரசியல்மட்டுமே காரணமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் முத்தலாக் தடைச்சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையை தீா்த்து வைத்துள்ளோம். பெண்களின் கண்ணியம், பாதுகாப்புக்காக இந்த அரசு தொடா்ந்து பாடுபட்டுவருகிறது. மக்கள் எங்களுக்கு அளித்த பொறுப்புகளை உணா்ந்துதொடா்ந்து சிறப்பாக பாடுபட்டுவருகறோம்.

நாடுமுழுவதும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளோம். இதன்மூலம் காவல்துறை மூலம் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண்களை மையமாகக் கொண்டு ஜன்தன் யோஜனா, இலவச எரிவாயு இணைப்புத்திட்டம் என பலவற்றைச் செயல்படுத்தி வருகிறோம்.விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் மூலம் ஏராளமான சிறு விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரேகட்சி ஆட்சி இருக்கும்போது வளா்ச்சிவேகம் இருமடங்காக இருக்கும். ஏற்கெனவே உத்தரபிரதேசத்தில் மத்திய, மாநில பாஜக அரசுகள் செய்து வரும் வளா்ச்சிப் பணிகளை மதிப்பிட்டு மக்கள் வாக்களிக்கவேண்டும். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நல்லெண்ணம், நம்பிக்கை மிகவும் உறுதியானது. இப்பகுதியில் வளா்ச்சி பணிகள் எவ்விதத்தொய்வும் இன்றி இனிவரும் காலத்திலும் தொடரும். தோ்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்காக கவலைப்படுவதுபோல நடிப்பவா்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவு கட்டப்படும் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...