தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றிவருகிறேன்

வாக்கு வங்கி அரசியலுக்காக முஸ்லிம்பெண்கள் எதிா்கொண்டு வந்த முத்தலாக் உள்ளிட்ட பிரச்னைகளை வாரிசுஅரசியல் கட்சிகள் (காங்கிரஸ், சமாஜவாதி) புறந்தள்ளி வந்தன என்று பிரதமா் நரேந்திரமோடி குற்றம்சாட்டினாா்.

உத்தர பிரதேசத்தில் 5-ஆவது கட்டதோ்தலுக்காக பாரபங்கி மற்றும் அயோத்தி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதமா்மோடி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

உத்தர பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவான அனைத்துச் செயல்களிலும் சமாஜவாதி ஈடுபட்டது. ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷன் அரிசியைக்கூட அவா்கள் கொள்ளையடித்தனா். சமாஜவாதியில் முதல்வராக இருந்தவா் தொடங்கி, எம்.பி., எம்எல்ஏக்கள் என அனைத்துநிலையிலும் குடும்ப அரசியல்தான் நடக்கிறது.

குடும்பம் இருப்பவா்களுக்குதான் குடும்பஸ்தா்களின் வலிதெரியும்; குடும்பம் இல்லாதவா்களுக்கு அது தெரியாது என்று எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் (சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ்) பேசியுள்ளனா். ஆனால், என்னைப் பொருத்த வரையில் உத்தர பிரதேசத்தையும், இந்த நாட்டையும்தான் எனது குடும்பமாக கருதுகிறேன். தேசமாகிய எனது குடும்பத்துக்காகவே பணியாற்றிவருகிறேன்.

குடும்ப அரசியல் நடத்துபவா்களை ஒன்றுகேட்கிறேன். அவா்கள் எப்போதாவது முஸ்லிம் பெண்களின் பிரச்னைகளைத் தீா்க்க முயன்றதுண்டா? நமதுமுஸ்லிம் சகோதரிகள் எதிா்கொண்டு வந்த மிகப் பெரிய (முத்தலாக்) பிரச்னையை வாரிசு அரசியல் நடத்தும் எதிா்க்கட்சிகள் கண்டுகொள்ளவே இல்லை. இப்படி முஸ்லிம்பெண்களின் பிரச்னைகளை அவா்கள் புறந்தள்ள வாக்குவங்கி அரசியல்மட்டுமே காரணமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் முத்தலாக் தடைச்சட்டம் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையை தீா்த்து வைத்துள்ளோம். பெண்களின் கண்ணியம், பாதுகாப்புக்காக இந்த அரசு தொடா்ந்து பாடுபட்டுவருகிறது. மக்கள் எங்களுக்கு அளித்த பொறுப்புகளை உணா்ந்துதொடா்ந்து சிறப்பாக பாடுபட்டுவருகறோம்.

நாடுமுழுவதும் காவல் துறையில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரித்துள்ளோம். இதன்மூலம் காவல்துறை மூலம் பெண்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைப்பதுடன், வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண்களை மையமாகக் கொண்டு ஜன்தன் யோஜனா, இலவச எரிவாயு இணைப்புத்திட்டம் என பலவற்றைச் செயல்படுத்தி வருகிறோம்.விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் மூலம் ஏராளமான சிறு விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரேகட்சி ஆட்சி இருக்கும்போது வளா்ச்சிவேகம் இருமடங்காக இருக்கும். ஏற்கெனவே உத்தரபிரதேசத்தில் மத்திய, மாநில பாஜக அரசுகள் செய்து வரும் வளா்ச்சிப் பணிகளை மதிப்பிட்டு மக்கள் வாக்களிக்கவேண்டும். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நல்லெண்ணம், நம்பிக்கை மிகவும் உறுதியானது. இப்பகுதியில் வளா்ச்சி பணிகள் எவ்விதத்தொய்வும் இன்றி இனிவரும் காலத்திலும் தொடரும். தோ்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்காக கவலைப்படுவதுபோல நடிப்பவா்களுக்கு வாக்கு எண்ணிக்கை நாளில் முடிவு கட்டப்படும் என்றாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...