மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள்

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்தவரை தமிழக பாஜக தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் பன்னீர் செல்வம், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “குடியரசுத் துணைதலைவர் வெங்கைய நாயுடு அவர்களை எனக்கு 25 ஆண்டுகளாகத் தெரியும். அவர் குறித்து அறிந்து கொண்ட நான் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என விரும்பினேன். ஹைதராபாத் நகரில் ஒருநண்பர் மூலமாக முதன்முதலில் அவரைச் சந்தித்தேன். அதன் பின்னர் ஒருமுறை பெங்களூரில் 2 மணிநேரம் சந்தித்துப்பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவர் தப்பித் தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். காரணம் அவரிடம் பேசியதைவைத்து சொல்கிறேன் அவர் ஒரு ஆன்மிக உணர்வு கொண்ட மனிதர்.

அவர் எப்போதும் எளியமனிதர்கள் குறித்துதான் பேசுவார். அந்த அக்கறை எனக்கு ஆச்சர்யம் தந்தது. வெங்கையாவின் நினைவாற்றல் எனக்கு பிடிக்கும். அவர் இன்னும் பலஉயரங்கள் செல்ல வேண்டும். அதற்கான ஆரோக்கியத்தை வழங்க வேண்டும் என ஆண்டவனை நான் வேண்டிக்கொள்கிறேன்.

இங்கு மரியாதைக்குரிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்திருக்கிறார். மிஷன் காஷ்மீரின் வெற்றிக்கு உங்களுக்கு எனதுமனமார்ந்த வாழ்த்துகள். அதை நீங்கள் சாத்தியப்படுத்திய விதத்துக்கு ஹேட்ஸ் ஆஃப். குறிப்பாக நாடாளுமன்றத்தில் நீங்கள் அது தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே.

மோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்னன் போன்றவர்கள். இதில் யார்கிருஷ்ணன் யார் அர்ஜுணன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமேதெரியும். உங்களுக்கு வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நடிகர் ரஜினிகாந்த் வரவேற்று பேசியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...