வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ளது

நாட்டின் 73 வத சுதந்திரதினத்தை முன்னிட்டு டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி, 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றினார்.

தொடர்ந்து நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி பிரதமர் மோடி, டில்லி செங்கோட்டையில் தொடர்ந்து 6 வது முறையாக தேசியக்கொடி ஏற்றும் காங்., அல்லாத 2 வது பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் பா.ஜ.,வை சேர்ந்த வாஜ்பாய் மட்டுமே தொடர்ந்து 6 முறை செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார்.

முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி. தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுதந்திரத்திற்காக உயிர்தியாகம் செய்தவர்களுக்கு எனது வணக்கங்கள். இன்று ரக்ஷாபந்தன் கொண்டாட படுகிறது. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். புதியஅரசு பதவியேற்று மீண்டும் தேசியக்கொடி ஏற்ற வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக பலர்தங்களின் வாழ்வை தியாகம்செய்தனர். பலர் தங்களின் இளமை காலத்தை சிறையில்கழித்துள்ளனர். விடுதலைக்காக போராடியவர்களுக்கு எனது வணக்கங்கள்.

முஸ்லீம் தாய்மார்கள், சகோதரிகளின் உரிமைகளுக்காக முத்தலாக்முறை நீக்கப்பட்டது. விவசாயிகளுக்கு 90,000 கோடி நிதியுதுவி அளிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும் என விவசாயிகள் கனவுகூட கண்டிருக்க மாட்டார்கள். 60 வயதிற்கு பிறகு கவுரவமாகவாழ இது உதவிகரமாக இருக்கும். வெள்ளதுயரை துடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிற்கு புதியசட்டங்கள், புதியசிந்தனை தேவை. குழந்தைகள் நலனுக்காகவும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அனைத்து பிரிவினருக்காகவும் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தொடர் செய்வோம். மக்கள்சேவை ஆற்றி கிடைத்த வாய்ப்பை ஒருஇழையை கூட வீணடிக்காமல் நிறைவேற்றுவோம். நாட்டுமக்களின் ஆதரவால் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தோம். 2014 தேர்தலுக்கு பிறகு மக்கள் எதிர்பார்த்ததைவிட அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் வல்லபாய் பட்டேலின் கனவு நினைவாகி உள்ளது.

மோடிக்கு வேண்டியவர்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்கள்தான் போட்டியிட்டார்கள். 130 கோடி இந்தியர்கள் தங்களின் கனவை நிறைவேற்றுவதற்காக எனக்கு இந்தவாய்ப்பை அளித்துள்ளனர்.

இஸ்லாமிய நாடுகளில் ஏற்கனவே முத்தலாக் தடைசெய்யப்பட்டு விட்டது. ஆனால் இந்தியாவில் முத்தலாக் தடை கொண்டுவர தாமதம் ஏன் என புரியவில்லை. பால்ய விவாகத்தை தடைசெய்த நம்மால் முத்தலாக்கையம் தடைசெய்ய முடியும். எங்கள் அரசு அமைந்து 10 வாரங்களில் 370, 35 ஏ நீக்கப்பட்டது. பிரச்னைகளை இனிவளர்க்கவும் கூடாது. வளர விடவும் கூடாது.
பிரச்னையின் ஆணிவேரை அகற்றுவதே இப்போதையதேவை. பிரச்னைகளை களைவதில் எங்கள் அரசு ஒருபோதும் தாமதிக்காது. காஷ்மீர் விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்தன. காஷ்மீர் ஆட்சி செய்தவர்கள் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் 370 பிரிவு பயங்கரவாதத்தை வளர்த்துள்ளது.370 பிரிவு போன்ற பிரச்னைகளை தொடர்ந்த நாம் வைத்திருக்கமுடியாது. ஆதிவாசிகளுக்கு மற்ற மாநிலங்களில் கிடைத்த உரிமை அங்கு கிடைக்கவில்லை. காஜ்மீர் மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளேன்.

ஊழல் நிறைந்த அரசியல் விரைவில் முற்றிலும் ஒழிக்கபடும். காஷ்மீரில் வசிக்க நினைப்பவர்களுக்கு போதிய உரிமை கிடைக்கவில்லை. 370 பிரிவு நீக்கம் பற்றி எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன. எதிர்க்கட்சிகளை பார்த்து காஷ்மீர் மக்கள் கேட்கிறார்கள், தற்காலிகமானது என கூறிவிட்டு 70 ஆண்டுகளாக 370 பிரிவை நீக்காதது ஏன்? இதுவரை இருந்தசட்டங்கள் காஷ்மீர் பெண்களுக்கு எதிராக இருந்தன. இஸ்லாமிய பெண்களுக்கும் சமஉரிமையும், பாதுகாப்பும் கிடைத்துள்ளது. லடாக் மற்றும் காஷ்மீரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படும். முந்தைய அரசு பயங்கரவாதத்தை ஊக்கப்படுத்தி வந்தது. 370, 35ஏ காஷ்மீர் மக்களின் முன்னேவற்றத்திற்கு தடையாக இருந்தது.

ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு சட்டம் என்பதை செயல்படுத்தியதில் பெருமிதம்கொள்வோம். தேர்தலில் தோற்றவர்கள் 370 நீக்கத்தை விமர்சித்து வருகின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்னும் பலபுதிய முயற்சிகளை அரசு எடுத்துவருகிறது. ஜிஎஸ்டி மூலம் ஒரேநாடு ஒரேவரி கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் கனவுகளை நிறைவேற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும். இவ்வாறு தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...