கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  உடல்நலக்குறைவு காரணமாக   எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது  66வது வயதில் மரணமடைந்துள்ளார். .

1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர். சிறு வயதினிலே சமூகத்தின் மீது  கொண்ட பற்றால் மாணவ அமைப்பான அகில இந்திய வித்யாதி  பாரிசத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியை தீரத்துடன் எதிர்கொண்டு சிறை வாசம் கண்டவர்.

1980 ம் ஆண்டு பாஜகவின் இளைஞர் அணியில்  தனது அரசியல் கணக்கை தொடங்கினர். பாஜகவின் தேசிய செயற்குழு, தேசிய பொதுச் செயலாளர், கட்சியின் செய்தித் தொடர்பார் ,முக்கிய முடிவுகளை எடுக்கும், ஒரு சிலர்களை மட்டுமே உள்ளடக்கிய, உயர்மட்ட குழுவில் முக்கியமானவர் என பாஜக.,வின் முக்கிய கட்டமைப்புகளில் ஒருவராகவே ஆகிப்போனவர்.

அதே போன்று தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம்பயின்று . வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சிகாலத்தில் பெற்றவர்.

1999ம் ஆண்டு பாஜக.,வின்  வாஜ்பாய் அரசில்  , சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத்துறை .தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும், 2014ம் ஆண்டைய மோடி அரசில் நிதி அமைச்சராகம் பின்னர் . சில காலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார்.

கருப்பு பணம் ஒழிப்பு, ஜி.எஸ்.டி போன்ற கடினமான விஷயங்களை மிகவும் திறம்பட கையாண்டார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் போலி குற்றச்சாட்டுகளை தனது சமயோகிதமான பதில்களின் மூலம் நீர்த்து போகச் செய்தவர். சிறந்த கட்டுரையாளர். எத்தகைய கடினமான விஷயங்களையும் சித்தாந்தம் பிசகாமல் கட்டுரை வடிவில் ஆழமாக விவாதிக்க கூடியவர்.

சிக்கலான கால கட்டத்தில் பாரதிய ஜனதா பேரியக்கத்தை தாங்கிபிடித்த முக்கிய தூண்.  2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் எனக்கவுண்டர் வழக்கு உள்ளிட்டவற்றில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஸாவின் நியாயமான குரலை நீதிமன்றத்திலும், ஊடகங்களிலிலும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்ததாகட்டும், . 2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே சிறந்த தேர்வு என்று வலியுறுத்தியதாகட்டும், அன்றைக்கு கட்சிக்குள் உருவான சல சலப்பை சரிசெய்து நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற்று பாரத பிரதமராக முடிசூட கடைசி வரை உறுதுணையாக இருந்ததாகட்டும், ஜெயலலிதாவுடன் கொண்ட  நட்பால் ஆரம்ப காலத்தில் பாஜக.,வின் ஆதரவு குரலாக அவரை மாற்றியதாகட்டும்,  பிஹாரில் நிதிஸ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில்  மீண்டும் கொண்டுவந்து கூட்டணியை பலப்படுத்தியதாகட்டும் என்று கூறிக்கொண்டே செல்லலாம். குறிப்பாக இவரது இழப்பு பாஜக கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...