கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு

பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி  உடல்நலக்குறைவு காரணமாக   எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது  66வது வயதில் மரணமடைந்துள்ளார். .

1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர். சிறு வயதினிலே சமூகத்தின் மீது  கொண்ட பற்றால் மாணவ அமைப்பான அகில இந்திய வித்யாதி  பாரிசத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியை தீரத்துடன் எதிர்கொண்டு சிறை வாசம் கண்டவர்.

1980 ம் ஆண்டு பாஜகவின் இளைஞர் அணியில்  தனது அரசியல் கணக்கை தொடங்கினர். பாஜகவின் தேசிய செயற்குழு, தேசிய பொதுச் செயலாளர், கட்சியின் செய்தித் தொடர்பார் ,முக்கிய முடிவுகளை எடுக்கும், ஒரு சிலர்களை மட்டுமே உள்ளடக்கிய, உயர்மட்ட குழுவில் முக்கியமானவர் என பாஜக.,வின் முக்கிய கட்டமைப்புகளில் ஒருவராகவே ஆகிப்போனவர்.

அதே போன்று தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம்பயின்று . வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சிகாலத்தில் பெற்றவர்.

1999ம் ஆண்டு பாஜக.,வின்  வாஜ்பாய் அரசில்  , சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத்துறை .தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும், 2014ம் ஆண்டைய மோடி அரசில் நிதி அமைச்சராகம் பின்னர் . சில காலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார்.

கருப்பு பணம் ஒழிப்பு, ஜி.எஸ்.டி போன்ற கடினமான விஷயங்களை மிகவும் திறம்பட கையாண்டார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் போலி குற்றச்சாட்டுகளை தனது சமயோகிதமான பதில்களின் மூலம் நீர்த்து போகச் செய்தவர். சிறந்த கட்டுரையாளர். எத்தகைய கடினமான விஷயங்களையும் சித்தாந்தம் பிசகாமல் கட்டுரை வடிவில் ஆழமாக விவாதிக்க கூடியவர்.

சிக்கலான கால கட்டத்தில் பாரதிய ஜனதா பேரியக்கத்தை தாங்கிபிடித்த முக்கிய தூண்.  2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் எனக்கவுண்டர் வழக்கு உள்ளிட்டவற்றில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஸாவின் நியாயமான குரலை நீதிமன்றத்திலும், ஊடகங்களிலிலும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்ததாகட்டும், . 2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே சிறந்த தேர்வு என்று வலியுறுத்தியதாகட்டும், அன்றைக்கு கட்சிக்குள் உருவான சல சலப்பை சரிசெய்து நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற்று பாரத பிரதமராக முடிசூட கடைசி வரை உறுதுணையாக இருந்ததாகட்டும், ஜெயலலிதாவுடன் கொண்ட  நட்பால் ஆரம்ப காலத்தில் பாஜக.,வின் ஆதரவு குரலாக அவரை மாற்றியதாகட்டும்,  பிஹாரில் நிதிஸ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில்  மீண்டும் கொண்டுவந்து கூட்டணியை பலப்படுத்தியதாகட்டும் என்று கூறிக்கொண்டே செல்லலாம். குறிப்பாக இவரது இழப்பு பாஜக கருத்தியல் பிரச்சார  துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு.

நன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...