காஸ்மீரில் முதலீடு செய்யுங்கள் ராஜதந்திரம்

“மோடிக்கு மிக சிறந்த ராஜ தந்திரத்தை யாரோ வகுத்து கொடுக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது, மோடிஜி அட்டகாசமான ராஜ தந்திர வியூகத்தில் பின்னுகின்றார்.

பாரீஸ்செல்லும் வழியில் அபுதாபிக்கு சென்றார், அங்கு அவருக்கு அந்நாட்டின் உயரியவிருது முன்பு அறிவிக்கபடி வழங்கபட்டது.அப்பொழுதுதான் தேர்ந்த ராஜதந்திரத்தை காட்டியிருக்கின்றார் மோடி.

அபுதாபி சுல்தான்களும் அரபு சுல்தான்களும் கோணிப்பை நிறைய பணத்தை கட்டிகொண்டு அந்த விமானம் என்ன விலை? இந்த அரண்மனை என்ன விலை? என கேட்பதோடு மட்டுமல்லாமல் உலகெல்லாம் முதலீடு செய்யவதில் ஆர்வமுள்ள்ளவர்கள்.

கடலடி திமிங்கலங்கள் மீதும் பணம் கட்ட அவர்கள் ரெடி, வந்தால் பணம் போனால் என்ன ?….இருக்கவே இருக்கின்றது எண்ணெய் கிணறுகள்.வற்றாத செல்வம் வழங்கும் பண ஊற்றுகள்.

அந்த அரபு சுல்தான்களிடம் நீங்கள் ஏன் காஷ்மீரில் முதலீடு செய்ய கூடாது, தடையாக இருந்த சட்டங்களை எல்லாம் நாம் விலக்கிவிட்டோமே என வலிய கேட்டிருக்கின்றார்.

காஷ்மீர் இஸ்லாமியர் மாநிலம், இஸ்லாமிய சுல்தான்கள் வந்தால் அங்கு நிச்சயம் சிக்கல் ஏதுமில்லை.

அரபு சுல்தான்கள் கால் வைத்த இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் சல்யூட் அடித்து காவல் இருப்பார்கள் என்பது இன்னொரு விஷயம்.

ஆக, எந்த இஸ்லாமிய சகோதரத்துவத்தை கொண்டு காஷ்மீரில் பாகிஸ்தான் கண்ணாமுச்சி காட்டியதோ, அதே இஸ்லாமிய சகோதரத்துவத்தை தனக்கு கட்டுபட்ட காஷ்மீரில் காட்டி பாகிஸ்தானுக்கு மரண அடி கொடுகின்றது இந்தியா.

நிச்சயம், வைரத்தை வைரத்தாலே அறுக்கும் அருமையான ராஜதந்திரம் இது.

காஷ்மீரில் அழகும் செழுமையும் வனப்பும் இருக்கின்றது, ஆனால் பணமில்லை.

அரபு சுல்தான்களிடம் பணம் உண்டு ஆனால் பாலைவனம் தவிர ஏதுமில்லை.

ஆக இனி சுவிஸ், ஆல்ப்ஸ் என செல்லும் சுல்தான்கள் காஷ்மீருக்குள் வரலாம், பாகிஸ்தானும் சலாம் அலைக்கும் என சொல்லிவிட்டு அமைதியாகலாம்.

நாம் ஜனகராஜ் பாணியில் மோடியினை வாழ்த்தலாம்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...