கண்ணீர் ததும்பும் நேரம்

நலமா மோடி என்ற நிகழ்ச்சியில் தன்னுடன் அமெரிக்கஅதிபர் டொனால்ட் டிரம்பும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தது கண்ணீர் ததும்பும் நேரம் அது என்று பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மோடி குறிப்பிடுகையில், அந்தநிகழ்ச்சி மிகுந்த உயிரோட்டத்துடனும், இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் வகையிலும் அமைந்திருந்தது என தெரிவித்துள்ளார்.

ஹூஸ்டன் நிகழ்ச்சி என் வாழ்நாள் நினைவில் இருந்து என்றுமேபோகாது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தேசியகீதத்துடன் தொடங்கிய “மோடி நலமா’ நிகழ்ச்சியில், இந்திய-அமெரிக்க கலைஞர்கள் சுமார் 400 பேர் இசை மற்றும் நடனம் நிகழ்த்தினர். இந்திய-அமெரிக்கர்கள் இடையேயான பன்முக தன்மையை வெளிப்படுத்தும் வகையில் பல்லூடக காட்சிகளும் இடம்பெற்றன. பின்னர், பிரதமர் நரேந்திரமோடி மேடையேறிய போது, “மோடி, மோடி” என்ற கோஷத்தால் மைதானமே அதிர்ந்தது. பின்னர், அனைத்து திசைகளிலும் திரும்பி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த இந்திய வம்சாவளியினரை சிரம்தாழ்த்தி, கைகூப்பி வணங்கினார்.

பின்னர், அதிபர் டிரம்ப்பின் கையைப்பிடித்து, பிரதமர் மோடி மேடைக்கு அழைத்துவந்தார். இதைத்தொடர்ந்து, டிரம்ப்பை வரவேற்று, மோடி பேசியதாவது:

இந்தியா மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கு வாழ்த்துகள். நண்பர்களே, மிக விசேஷமான நபர் (டிரம்ப்) இப்போது நம்முடன் இருக்கிறார். அவரது பெயர், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரசித்தமானது. உலகரசியலில் நடைபெறும் ஒவ்வொரு விவாதங்களிலும் அவரது பெயர் இடம்பெறாமல் இருக்காது. உலகளவில் அரசியல் தொடங்கி பொருளாதாரம், பாதுகாப்புவரை அவரது ஆழமான தாக்கம் இருக்கும்.

டிரம்ப்பை முதல் முறையாக வெள்ளை மாளிகையில் நான் சந்தித்தபோது, “வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கு உண்மையான நண்பர் கிடைத்திருக்கிறார்” என்று கூறினார்.

இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்பு இதயப்பூர்வமானது. இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் புதிய உச்சத்தை கண்டு வருகிறோம். அமெரிக்காவின் பொருளாதாரத்தை டிரம்ப் மீண்டும் வலுப்படுத்தியுள்ளார். அமெரிக்கா மற்றும் இந்த உலகுக்காக அவர் சாதித்தவை ஏராளம். அடுத்தும் டிரம்ப் அரசுதான் அமையும் .

மோடி நலமா நிகழ்ச்சியில், அதிபர் டிரம்ப் பேசிய பிறகு, பிரதமர் மோடி மீண்டும் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:

நியூயார்க் இரட்டை கோபுரதாக்குதல், மும்பை தாக்குதலின் சதிகாரர்கள் எங்கிருந்து வந்தனர்? பயங்கரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிராக உறுதியான போரை முன்னெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு, அங்கு பயங்கரவாதத்தையும் பிரிவினை வாதத்தையும் ஊக்குவித்து வந்தது. அதனை நீக்கியதன் மூலம் அப்பிராந்தியத்தில் வளர்ச்சியும், வளமையும் உருவாக வழி ஏற்பட்டுள்ளது. இந்தமுடிவு, இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றில் இருபங்கு ஆதரவுடன் எடுக்கப்பட்டுள்ளது. (அப்போது மைதானத்தில் இருந்தவர்கள் கரவொலி எழுப்பினர்).

தங்களது சொந்த நாட்டை நிர்வகிக்க தெரியாதவர்கள் (பாகிஸ்தான்), ஜம்மு}காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவால் நிம்மதியிழந்துள்ளனர். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அதிபர் டிரம்ப்  ஆதரவு அளித்து வருகிறார் என்றார் மோடி.

ஹூஸ்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற “மோடி நலமா?’ நிகழ்ச்சியின் பின்னணியில் இந்திய-அமெரிக்க தேசியக்கொடிகளுடன் இணைந்த அதிபர் இலச்சினை காணப் பட்டது.

பொதுவாக, அமெரிக்க அதிபர் எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அதிபருக்கான இலச்சினைதான் அங்குவைக்கப்படும். இதற்கு மாறாக, மோடி நலமா நிகழ்ச்சியில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இருநாட்டுக் கொடிகளுடன் கூடிய புதிய அதிபர் இலச்சினை வைக்கப்பட்டிருந்தது பலரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது இந்தியாவுக்கு அமெரிக்கா அளித்த கௌரவம் என்று கருதப்படுகிறது.

உலகின் பெரிய இருநாட்டு தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது. உலகின் சக்திவாய்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபரும், பாரம்பரியமும் பண்பாடும் நிறைந்த இந்தியாவின் பிரதமரும் ஒன்றாக பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மறக்கமுடியாத அனுபவம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...