காஷ்மீர் அயோத்தி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்

பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச் சருமான அமித்ஷா இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஜார்கண்ட் மாநில பழங் குடியினரின் நலனுக்காக காங்கிரஸ் இது வரை என்னென நலத் திட்டங்களைச் செயல் படுத்தியுள்ளது என்பதை ராகுல் காந்தியால் பட்டியலிட்டு கூற முடியுமா என அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

ஜார்கண்ட் மாநிலத்தில்  எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாக சாடினார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதன் விவரம் :

கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீர் மற்றும் அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரங்களுக்கு தீர்வு கிடைக்காததற்கு காங்கிரஸ்தான் காரணம்.

அயோத்தியில் ராமர்கோவில் கட்டவேண்டும் என்பது அனைவரது ஆசை. ஆனால் தன்வோட்டு வங்கியை பாதுகாப்பதற்காக காங்கிரஸ் பிரச்சனைக்கு தீர்வை உருவாக்க விடவில்லை. தற்போது ராமரின் ஆசியால் அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழிவகுத்துவிட்டது.

அதேபோல் சட்டப்பிரிவு 370 ரத்துசெய்ததன் மூலம் பாரத மாதாவின் கிரீடத்தில் இருந்த கறை நீக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு வழிபிறந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் ஏழைமக்களை ஊழல்வாதிகளான காங்கிரஸ்-ஜார்கண்ட் முக்திமோர்ச்சா கூட்டணி மோசம் செய்து வருகிறது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல்செய்து மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால் முதல்வர் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தை முன்னேற்ற பாதையில் கொண்டுசென்றுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் ஜார்கண்டில் உள்ள பழங்குடி மக்களுக்காக என்னென்ன நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்ற பட்டியலை காங்கிரஸ் தலைவர் மற்றும் ராகுல்காந்தியால் கொடுக்க முடியுமா ?

ஆனால் பழங்குடி மக்களுக்கு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்கள் குறித்து பாஜக விரிவான அறிக்கையை அளிக்கும்.ஜார்கண்ட் மாநில மக்களுக்கு இத்தனை ஆண்டுகளில் மின்சாரவசதி, எரிவாயு இணைப்பு, சுகாதார அட்டைகள், கழிப்பறைகள், வீடுகள் என எந்தவசதிகளையும் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் ஏன் செய்து தரவில்லை ?

முதல்வர் ரகுபார் தாஸ் தலைமையிலான பாஜக அரசு மாநிலத்தில் ஊழலை மட்டுமன்றி நக்சல்களின் அட்டூழியங்களையும் கட்டுப்படுத்தி யுள்ளது.

ஜார்கண்ட் என்ற மாநிலத்தை உருவாக்கியதே பாஜக அரசுதான். பழங்குடி மக்களின் முக்கியத்துவத்தை உணர்த்து வதற்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி தலைவர்களின் பெருமையை விளக்கும் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தது.

பாஜக ஆட்சிக்குவந்தால் தன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க கமிட்டி ஒன்றை அமைக்கும்.

ஜார்கண்ட் மாநிலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவாக்கினார். அதன் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திரமோடி உறுதுணையாக இருப்பார் என்று அமித் ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...