அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும்

அயோத்தி நகர வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர்.

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலை 2024-ம் ஆண்டுக்குள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் நரேந்திரமோடி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அயோத்தியை நவீனமயமாக்கும் திட்டம், ரயில் நிலையம், விமானநிலையம் அமைப்பது குறித்து யோகி விளக்கம் அளித்தார்.

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம்அமைக்க மாநில அரசு ரூ.1,000 கோடியும், மத்திய அரசு ரூ.240 கோடியும் ஒதுக்கி உள்ளது என்று அப்போது பிரதமரிடம் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார். அப்போது அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது அயோத்திக்கு செல்லவேண்டும் என்ற ஆசையை வருங்கால சந்ததியினர் மத்தியில் நாம் ஏற்படுத்தவேண்டும் என மோடி வலியுறுத்தினார்.

ஒவ்வொரு இந்தியரின் கலாச்சார நினைவிலும் பொறிக்கப்பட்ட நகரமாக அயோத்தி இருக்கவேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

அயோத்தியில் பக்தர் களுக்கான தங்குமிடவசதிகள், ஆசிரமங்கள், மடங்கள், ஓட்டல்கள், பல்வேறு மாநிலங்களின் சார்பில் அமைக்கப்படும் மாளிகைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டது. மேலும் அங்கு ஒரு சுற்றுலாவசதி மையம், உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆகியவையும் கட்டப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-

One response to “அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான நகரமாக அயோத்தியை மாற்றவேண்டும்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

பட்டினிச் சிகிச்சை

இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ...