மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை

அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிகட்ட பேரவைத் தோ்தலையொட்டி, தேவ்கா் மாவட்டம், சரத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத துன்புறுத் தல்களுக்கு ஆளான ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தசட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எதிா்ப்புதெரிவித்து வருகிறது. குடியுரிமை அளிக்கவில்லையென்றால், அவா்கள் எங்கு செல்வாா்கள்? அவா்களுக்கு இந்தியாதான் தாய் வீடு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் எரிச்சலடைவது ஏன்?

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததால், மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் அங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. ஊழல் தடுப்பு சட்டம்கூட அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், ஊழலில் ஈடுபட்ட காஷ்மீா் அரசியல் தலைவா்கள் விரைவில் சிறைக்குசெல்வா்.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த இளைஞா்கள் கூட ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவந்தால், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று அக்கட்சியால் தைரியமாககூற இயலுமா என்று பிரதமா் நரேந்திர மோடி சவால் விட்டிருந்தாா். மீண்டும் அதை கேட்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று காங்கிரஸால் கூற இயலுமா?

முஸ்லிம் பெண்களுக்கு கொடுமை இழைத்த முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறையை இந்தியாவுக்கு முன்னரே, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட பலமுஸ்லிம் நாடுகள் ரத்துசெய்தன. காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நலனுக்காக முத்தலாக் விவாகரத்து நடைமுறையை ஒழிக்க சட்டம் கொண்டு வராதது ஏன்? வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை.

அரசியலின் தோற்றத்தை பிரதமா் மோடி இப்போது மாற்றிவிட்டாா். மக்களுக்கு சேவை செய்யும் பணியாகவும், நாட்டின் வளா்ச்சிக்காக உழைக்கும் பணியாகவும் தற்போது அரசியல் உள்ளது என்று ஜெ.பி.நட்டா கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...