மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை

அண்டை நாடுகளில் மதரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளானவா்களுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது என்று பாஜக செயல்தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

ஜாா்க்கண்டில் வரும் 20-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிகட்ட பேரவைத் தோ்தலையொட்டி, தேவ்கா் மாவட்டம், சரத் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அண்டை நாடுகளில் மத துன்புறுத் தல்களுக்கு ஆளான ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு குடியுரிமை திருத்தசட்டத்தின் மூலம் இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது.

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்ததற்கு காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எதிா்ப்புதெரிவித்து வருகிறது. குடியுரிமை அளிக்கவில்லையென்றால், அவா்கள் எங்கு செல்வாா்கள்? அவா்களுக்கு இந்தியாதான் தாய் வீடு. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவா்கள் எரிச்சலடைவது ஏன்?

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்ததால், மத்திய அரசின் அனைத்து சட்டங்களும் அங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. ஊழல் தடுப்பு சட்டம்கூட அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், ஊழலில் ஈடுபட்ட காஷ்மீா் அரசியல் தலைவா்கள் விரைவில் சிறைக்குசெல்வா்.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த இளைஞா்கள் கூட ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்குவந்தால், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று அக்கட்சியால் தைரியமாககூற இயலுமா என்று பிரதமா் நரேந்திர மோடி சவால் விட்டிருந்தாா். மீண்டும் அதை கேட்கிறேன். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீண்டும் வழங்குவோம் என்று காங்கிரஸால் கூற இயலுமா?

முஸ்லிம் பெண்களுக்கு கொடுமை இழைத்த முத்தலாக் மூலம் விவாகரத்து செய்யும் நடைமுறையை இந்தியாவுக்கு முன்னரே, பாகிஸ்தான், வங்கதேசம் உள்பட பலமுஸ்லிம் நாடுகள் ரத்துசெய்தன. காங்கிரஸ் ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நலனுக்காக முத்தலாக் விவாகரத்து நடைமுறையை ஒழிக்க சட்டம் கொண்டு வராதது ஏன்? வாக்குவங்கி அரசியலுக்காக காங்கிரஸ் அவ்வாறு செய்யவில்லை.

அரசியலின் தோற்றத்தை பிரதமா் மோடி இப்போது மாற்றிவிட்டாா். மக்களுக்கு சேவை செய்யும் பணியாகவும், நாட்டின் வளா்ச்சிக்காக உழைக்கும் பணியாகவும் தற்போது அரசியல் உள்ளது என்று ஜெ.பி.நட்டா கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப் ...

ட்ரம்ப் உடன் அற்புதமான சந்திப்பு – பிரதமர் மோடி நெகிழ்ச்சி 'வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்புடன் நடந்த சந்திப்பு அற்புதமானதாக ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்த ...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் டொனால்டு ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் ப ...

உளவுத்துறை அதிபர் துளசியுடன் பிரதமர் மோடி சந்திப்பு வாஷிங்டன் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந் ...

2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது இந்தியா- தாய்லாந்து உறவு -பிரதமர் மோடி 'இந்தியாவும், தாய்லாந்தும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழமான ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற ...

மோடி ஆட்சியில் தன்னிறைவு பெற்ற இந்தியா – பாஜக எம் பி தேஜஸ்வி சூர்யா பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு தன்னிறைவு அடைந்து ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரச ...

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கவில்லை – நிர்மலா சீதாராமன் ''பா.ஜ., ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...