இந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டம்

ந்திய ரெயில்களின் மந்த நிலையை முன்னேற்ற புதியதிட்டங்களை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.

இந்திய ரெயில்கள் உலகின் சிறந்த ரெயில்வேக்களில் ஒன்று என வசதிகள் அடிப்படையில் நற்பெயரை பெற்றுள்ளது. ஆனால் ரெயில்வே என்றாலே தாமதம் என்னும் நிலை உள்ளதையும் யாரும் மறுக்கமுடியாது. அதிவேக ரெயில்கள் என பெயரிடப்பட்ட ரெயில்களும் மெதுவான வேகத்தில் செல்வதால் இந்த தாமதம் ஏற்படுகிறது என பொதுவாக ஒருகருத்து நிலவி வருகிறது.

இதற்கு முக்கியக் காரணம் இந்திய ரெயில்வேக்களின் உள்கட்டமைப்பாகும். இதில் தண்டவாளங்கள், ரெயில் எஞ்சின்கள் போன்றவை முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவற்றை மேம்படுத்தத் தேவையான நிதிநிலை பற்றாக் குறை இந்திய ரெயில்வேக்கு இருந்து வருகிறது. குறிப்பாக நீண்டதூரம் செல்லும் ரெயில்களுக்கான தனிப் பாதைகள் எங்குமே இருப்பதில்லை. இதனால் அந்த ரெயில்கள் மட்டுமின்றி உள்ளூர் ரெயில்களும் தாமதம் ஆகின்றன.

இதுகுறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ரெயில்களின் மந்த நிலையை தவிர்க்க விரைவுரெயில்கள் செல்ல தனிதண்டவாளங்கள் அமைப்பது இன்றியமையாததாக உள்ளன. இதற்கு வரும் 12 ஆண்டுகளில் சுமார் ரூ. 50 லட்சம் கோடிவரை தேவைப்படுகிறது. இதற்கான முதலீடுகளை ஈட்டும் நிலையில் இந்திய ரெயில்வே உள்ளது.

இதற்காகத் தனியார் முதலீடுகளை இந்தியரெயில்வே பெருமளவில் நம்பி உள்ளது. அதேவேளையில் ரெயில்களை தனியார் மயமாக்கும் திட்டங்கள் இல்லை. ஆனால் அரசு மற்றும் தனியார் பங்கு பெறும் ஒருதிட்டம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு தனியார்கள் பங்களிப்பு ஏற்படும்போது கிடைக்கும் நிதியில் ரெயில்வே உள்கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்படும்.

எனவே ஒருசில இடங்களில் மட்டும் தனியார் பங்களிப்புடன் கூடிய ரெயில் சேவைகளை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது அதன் ஒருபகுதியாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனி நகரில் இருந்து உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள காசி வரை சிறப்பு ரெயிலை தனியார் பங்களிப்புடன் ஐ ஆர் சி டி சி இயக்க உள்ளது. இதன் மூலம் காசிக்குச் செல்லும் பக்தர்கள் பெருமளவில் பயன் அடைவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

ஊமத்தை இலையின் மருத்துவ குணம்

அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ...

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...