மத்திய அரசு கொண்டு வந்த புதிய திட்டங்களால் 14 கோடி விவசாயிகள் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் பெறும் உரிமையை பெற்றுள்ளனர். கல்விவளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் உரிமையை பெற்றுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் சாதனைகள் குறித்து நாடுபெருமிதம் கொள்கிறது. மிஷன் ககன்யானில் இஸ்ரோ முன்னேறி வருகிறது, இந்தியா அதை உற்சாகத்துடன் எதிர் பார்க்கிறது. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் தடகள வீரர்கள் சாதனை படைப்பார்கள் என நம்புகிறேன். நீர்சேமிப்புக்கு அரசு கவனம் செலுத்தி வருகிறது.
தூய்மை இந்தியா பொதுமக்களின் பங்களிப்பால் மிகக்குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டம் பெருமைப்பட வேண்டியஒன்று. இது ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியுள்ளது. இதில் 8 கோடி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மஹாத்மாவின் கொள்கைகள் இன்றும் பொருந்துகின்றன. நம் அரசியலமைப்பு நம் அனைவருக்கும் சில உரிமைகளை வழங்கியுள்ளது. நீதி, சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை ஜனநாயக கொள்கைகளுக்கு நாம் எப்போதும் உறுதியுடன் இருக்கவேண்டும். இந்தாண்டு ஜப்பான் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இந்திய வீர்ர்கள் பதக்கம்வெல்ல வாழ்த்துகிறேன்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியரசு தின உரை
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |