மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி பாஜக தொடர்ந்த வழக்கில் முதலமைச்சர் கமல்நாத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 22 பேர் பதவி விலகியதைத் தொடர்ந்து முதலமைச்சர் கமல்நாத்தை பெரும்பான்மையை நிரூபிக்க நேற்றே ஆளுநர் உத்தரவிட்டார்.
இதன்படி சட்டப்பேரவை நேற்றுகாலை கூடிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக பேரவைவரும் 26ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் மனு அளிக்கபட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹேமந்த்குப்தா அமர்வு, மனு தொடர்பாக சபாநாயகர், முதலமைச்சர் கமல்நாத் மற்றும் அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |