22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்

காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த 22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.

“எங்கள் 22 எம்.எல்.ஏக்கள் இன்று கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவின் ஆசீர்வாதத்துடன் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகிடைக்கும். அவர் எங்களை ஊக்குவித்து அனைவரின் மரியாதையும் பேணப்படும் என்று உறுதியளித்தார்.” என்று சிந்தியா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆறு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட மத்தியபிரதேசத முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜக தலைவர் ஜே .பி.நட்டாவின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சித்தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இந்தஇணைப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சனிக்கிழமை, மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதி, காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் ஆறு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அனைத்து கிளர்ச்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

இந்த உறுப்பினர்களில் இமார்டி தேவி, துளசிசிலாவத், பிரதியுமான்சிங் தோமர், மகேந்திர சிங் சிசோடியா, கோவிந்த் சிங் ராஜ்புத் மற்றும் பிரபுரம் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள்.

கமல்நாத் மத்தியபிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பாஜகவின் மூத்த தலைவர் சிவ்ராஜ்சிங் சவுகான், வெள்ளிக்கிழமை தனது கட்சி மாநில அரசை அமைப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ முயற்சி செய்யவில்லை என்று கூறியதுடன், காங்கிரஸை சுயஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்..

தனது இராஜிநாமாவை வழங்கிய பின்னர், கமல்நாத், மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஜனநாயக கொள்கைகளை பலவீனபடுத்துவதில் ஒருபுதிய அத்தியாயத்தை சேர்க்கிறது என்று கூறினார். வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக போபாலில் ஒருசெய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரசின் முக்கிய முகமான ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்ததை அடுத்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...