22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்

காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் சேர்ந்த 22 எம்எல்ஏ.,களுக்கும் தேர்தலில் மீண்டும்போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பாஜக தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தெரிவித்தார்.

“எங்கள் 22 எம்.எல்.ஏக்கள் இன்று கட்சித்தலைவர் ஜே.பி.நட்டாவின் ஆசீர்வாதத்துடன் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகிடைக்கும். அவர் எங்களை ஊக்குவித்து அனைவரின் மரியாதையும் பேணப்படும் என்று உறுதியளித்தார்.” என்று சிந்தியா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆறு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட மத்தியபிரதேசத முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், பாஜக தலைவர் ஜே .பி.நட்டாவின் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். கட்சித்தலைவர்கள் ஜோதிராதித்யா சிந்தியா, நரேந்திர சிங் தோமர், கைலாஷ் விஜயவர்கியா ஆகியோர் இந்தஇணைப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக சனிக்கிழமை, மத்திய பிரதேச சட்டமன்ற சபாநாயகர் என்.பி. பிரஜாபதி, காங்கிரசின் முன்னாள் மூத்த தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவின் ஆதரவாளர்கள் எனக்கூறப்படும் ஆறு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அனைத்து கிளர்ச்சி எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

இந்த உறுப்பினர்களில் இமார்டி தேவி, துளசிசிலாவத், பிரதியுமான்சிங் தோமர், மகேந்திர சிங் சிசோடியா, கோவிந்த் சிங் ராஜ்புத் மற்றும் பிரபுரம் சவுத்ரி ஆகியோர் அடங்குவர். அவர்கள் அனைவரும் கமல்நாத் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்கள்.

கமல்நாத் மத்தியபிரதேச முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், பாஜகவின் மூத்த தலைவர் சிவ்ராஜ்சிங் சவுகான், வெள்ளிக்கிழமை தனது கட்சி மாநில அரசை அமைப்பதற்கோ அல்லது கவிழ்ப்பதற்கோ முயற்சி செய்யவில்லை என்று கூறியதுடன், காங்கிரஸை சுயஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டார்..

தனது இராஜிநாமாவை வழங்கிய பின்னர், கமல்நாத், மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த நிகழ்வுகள் ஜனநாயக கொள்கைகளை பலவீனபடுத்துவதில் ஒருபுதிய அத்தியாயத்தை சேர்க்கிறது என்று கூறினார். வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக போபாலில் ஒருசெய்தியாளர் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

காங்கிரசின் முக்கிய முகமான ஜோதிராதித்யா சிந்தியா ராஜினாமா செய்து பாஜகவில் சேர்ந்ததை அடுத்து 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...