கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள்

கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்தியநிலையில்,கடந்த 6ம் தேதி 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிபயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் பிரதமர்மோடியின் சித்தாந்தத்தையும், தமிழக அரசியலில் ஒரு நல்ல மாற்றத்தை கொடுக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய, எந்த தலைவர்களாக இருந்தாலும் பாஜகவில் இணையலாம். இணைந்த அனைத்துதலைவர்களும் தேசியம் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டுள்ளனர்.

ஒரு அரசியல்கட்சியில் யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது. அது நடக்கட்டும் பதில் கூறுகிறேன் என தெரிவித்தார். அரசியலில் ஒருஇடத்தில் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. மக்களுக்கு சேவைசெய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது. பாஜகவில் யாருவந்தாலும் மகிழ்ச்சிதான். முக்கியமாக பாஜகவின் சித்தாந்த அடிப்படையில் வரவேண்டும் என கூறினார்.

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திடீரென இன்று விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார்.

மேகதாது விவகாரம்தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது, மேகதாது விவகாரம் முடிந்து விட்டது என்றும் மற்ற மாநிலங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அணைகட்ட முடியாது என்பதை மத்திய அரசு தெளிவுப் படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

One response to “கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது சிலர் பாஜகவுக்கு வருகிறார்கள்”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்