நிஜாமுதீன் மார்கஸ் மாநாடு ஏதேனும் சதி பின்னலா?

தமிழகத்தில் நேற்றைய(மார்ச் 30) நிலவரபடி, கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக இருந்தது. இந்தநிலையில் நேற்று (மார்ச் 31) காலை மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த எண்ணிக்கை 74 ஆக மெல்ல உயர்ந்திருந்தது.

இந்நிலையில்தான், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ்,நேற்றைய செய்தியாளர்கள் சந்திப்பில்  அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

தமிழகத்தில்  மேலும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டிருக்கிறது என்ற அவரது அந்தஅறிவிப்பு, ஏற்கெனவே கொரோனா பீதியின் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள பொது மக்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

அத்துடன், புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ள 50 பேரில், 45 பேர் டெல்லியில் அண்மையில் நடைபெற்ற மதரீதியான மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் என்றசெய்தி, பொதுமக்களுக்கு இடியாய் இறங்கியுள்ளது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேரில், 1,130 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இவர்களில் 515 பேர்மட்டுமே அடையாளம் காணப் பட்டுள்ளனர் என்ற சுகாதாரத்துறை செயலாளரின் தகவல் மக்களுக்கு இன்னொரு இடியாக இறங்கியுள்ளது.

இப்படி, தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரேநாளில் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இந்த மாநாடு குறித்தும், இந்த மாநாடு கொரோனா வைரஸ்பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறை தாக்கம் குறித்தும் இங்கு காண்போம்…

மார்ச் 13: மதரீதியான சர்வதேசமாநாட்டுக்காக ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சவூதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 3,400 பேர் டெல்ல நிஜாமுதீன் மார்கஸ் எனுமிடத்தில் ஒன்றாக கூடினர்.

மார்ச் 16: டெல்லியில் மார்ச் 31 ஆம் தேதிவரை மதரீதியான, சமூக நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கூடக்கூடாதென டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உத்தரவு

மார்ச் 20: டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, தெலங்கானா சென்ற 10 இந்தோனேசியர்களுக்கு கொரோனா  உறுதி.

மார்ச் 22: பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தப்படி, கொரோனா பரவலை தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிப்பு

மார்ச் 23: டெல்லி, மதரீதியான மாநாட்டில் பங்கேற்ற 1,500 பேர் மாநாடு நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறினர்.

மார்ச் 24: பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு

மார்ச் 25: டெல்லிமாநாட்டில் பங்கேற்றவர்கள் 1,000 பேர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திலேயே முடக்கம்

மார்ச் 26: கொரோனா தொற்றுக்கு ஆளான மத போதகர் ஜம்மு -காஷ்மீர் மாநிலம்,ஸ்ரீநகரில் மரணம்.

மார்ச் 28: உலகசுகாதார நிறுவன அதிகாரிகள் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டு இடத்துக்கு வருகை. அவர்களின் பரிந்துரையின் பெயரில் அங்கு தங்கியிருந்த வர்களில் 33 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்..

மார்ச் 29: அரசின் எச்சரிக்கையையும்மீறி மாநாட்டு இடத்தில் தொடர்ந்து தங்கியிருந்த அனைவரும் டெல்லி போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தபட்டனர்.

மார்ச் 31: மதரீதியான மாநாட்டுக்கு ஏற்பாடுசெய்த அமைப்பின் நிர்வாகிகள் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைசேர்ந்த 50 பேர், டெல்லியை சேர்ந்த 24 பேர் உள்பட மொத்தம் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 84 பேருக்கு தற்போது கொரோனாதொற்று உறுதியாகியுள்ளது. மேலும், இந்தமாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சேர்ந்த 824 பேர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனால், கொரோனா வைரசின் மூன்றாம் நிலையான சமூகபரவலுக்கு இம்மாநாட்டில் பங்கேற்றவர்கள் முக்கிய காரணமாக அமைந்துவிடுவார்களோ என்ற அச்சம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. மேலும் இதில் ஏதேனும் சதிவலைகள் பின்னப் பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சங்கிலையின் மருத்துவக் குணம்

சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...