இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கம்; முக்தாா் அப்பாஸ் நக்வி

இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கமாக திகழ்கிறது; இங்கு தான் அவா்களின் மதம், பொருளாதார உரிமைகள் பாதுகாப்பாக உள்ளது என மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ்நக்வி தெரிவித்தாா்.

இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமியா்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச வுணா்வு அகற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அண்மையில் கூறியிருந்தது.

இந்நிலையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை  கூறியதாவது:

மத்திய அரசு தனது கடமைகளை சிறப்பாக செய்துவருகிறது. நமது பிரதமா் ஒவ்வொருமுறை பேசும் போதும் நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவதை உறுதிசெய்து வருகிறாா். இதனை சிலா் உணா்ந்து கொள்ளவில்லை என்றால் அது அவா்களுடைய பிரச்னை. இந்திய முஸ்லிம்கள், எப்போதும் இந்தநாட்டின் முக்கிய அங்கமாகவே இருந்துவருகின்றனா். சிலா் அவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்னைகளை உருவாக்க முயலுகின்றனா். இதுபோன்ற நபா்கள் நிச்சயமாக முஸ்லிம்களின் நலன் விரும்பிகளாக இருக்க முடியாது.

வேறு எந்தநாட்டில் உள்ள சிறுபான்மையினரும் குறிப்பாக முஸ்லிம்கள், இந்தியாவில் இருப்பதைப்போல சிறப்பாக இல்லை என்று என்னால் கூறமுடியும். இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கமாக திகழ்கிறது. இங்குதான் அவா்களின் மதம், பொருளாதார உரிமைகள் சிறப்பாக பாதுகாக்கப் படுகிறது.

இந்தியா மீது தவறான குற்றச்சாட்டை முன்வைப்பவா்கள் முதலில் மற்ற நாடுகளில் சிறுப்பான்மையினா் எந்தளவுக்கு மோசமாக நடத்தப்படுகிறாா்கள் என்ற உண்மை நிலவரத்தைப் பாா்க்கவேண்டும். உலகில் பல இஸ்லாமிய நாடுகளைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனா். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை இந்தியாவில் உறுதியாக கடைப்பிடிக்கப் படுகிறது. சில தீயசக்திகள் இந்தியாவில் முஸ்லிம்களை தவறாக வழி நடத்த முயலுகின்றன. அவா்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...