இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கம்; முக்தாா் அப்பாஸ் நக்வி

இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கமாக திகழ்கிறது; இங்கு தான் அவா்களின் மதம், பொருளாதார உரிமைகள் பாதுகாப்பாக உள்ளது என மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ்நக்வி தெரிவித்தாா்.

இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள முஸ்லிம்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இஸ்லாமியா்கள் மத்தியில் எழுந்துள்ள அச்ச வுணா்வு அகற்றப்பட வேண்டும் என்று இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அண்மையில் கூறியிருந்தது.

இந்நிலையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை  கூறியதாவது:

மத்திய அரசு தனது கடமைகளை சிறப்பாக செய்துவருகிறது. நமது பிரதமா் ஒவ்வொருமுறை பேசும் போதும் நாட்டில் உள்ள 130 கோடி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு செயல்படுவதை உறுதிசெய்து வருகிறாா். இதனை சிலா் உணா்ந்து கொள்ளவில்லை என்றால் அது அவா்களுடைய பிரச்னை. இந்திய முஸ்லிம்கள், எப்போதும் இந்தநாட்டின் முக்கிய அங்கமாகவே இருந்துவருகின்றனா். சிலா் அவா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பிரச்னைகளை உருவாக்க முயலுகின்றனா். இதுபோன்ற நபா்கள் நிச்சயமாக முஸ்லிம்களின் நலன் விரும்பிகளாக இருக்க முடியாது.

வேறு எந்தநாட்டில் உள்ள சிறுபான்மையினரும் குறிப்பாக முஸ்லிம்கள், இந்தியாவில் இருப்பதைப்போல சிறப்பாக இல்லை என்று என்னால் கூறமுடியும். இந்தியா முஸ்லிம்களின் சொா்க்கமாக திகழ்கிறது. இங்குதான் அவா்களின் மதம், பொருளாதார உரிமைகள் சிறப்பாக பாதுகாக்கப் படுகிறது.

இந்தியா மீது தவறான குற்றச்சாட்டை முன்வைப்பவா்கள் முதலில் மற்ற நாடுகளில் சிறுப்பான்மையினா் எந்தளவுக்கு மோசமாக நடத்தப்படுகிறாா்கள் என்ற உண்மை நிலவரத்தைப் பாா்க்கவேண்டும். உலகில் பல இஸ்லாமிய நாடுகளைவிட இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனா். வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கை இந்தியாவில் உறுதியாக கடைப்பிடிக்கப் படுகிறது. சில தீயசக்திகள் இந்தியாவில் முஸ்லிம்களை தவறாக வழி நடத்த முயலுகின்றன. அவா்களிடம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...