மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற வேண்டும்

மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இதில் சிலமருந்துகள் சோதனை நிலையை எட்டியுள்ளன.

இந்நிலையில், கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதுகுறித்து பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள், மருந்து நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல் படுகின்றன. முத்தரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்கவேண்டும்” என்று கேட்டு கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைசெயலாளர் பி.கே.மிஸ்ரா, முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், ஆலோசகர் அமர்ஜித் சின்ஹா, பயோ தொழில்நுட்ப துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா, சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கரோனா வைரஸுக்கு மருந்துகண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர்  புகழாரம் சூட்டினார். அதேநேரம் மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புதியமருந்துகளை அவசரகால அடிப்படையில் சோதனைசெய்ய அந்தநாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் புதிய மருந்துகளை விலங்குகளுக்கு அளித்து சோதனை நடத்துவதற்குக்கூட பல மாதங்கள் ஆகின்றன.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ‘ரெமிடெசிவிர்’ மருந்து நல்லபலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்தமருந்து மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நமது சிவப்புநாடா நடைமுறைகளால் இந்த மருந்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே காலத்துக்கு ஏற்றவகையில் இந்திய மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...