மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளை மாற்ற வேண்டும்

மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

கரோனா வைரஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தற்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் உள்ளன. இதில் சிலமருந்துகள் சோதனை நிலையை எட்டியுள்ளன.

இந்நிலையில், கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி எந்த நிலையில் உள்ளது என்பதுகுறித்து பல்வேறு மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “கரோனா வைர ஸுக்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள், மருந்து நிறுவனங்கள், மத்திய அரசு ஆகியவை இணைந்து செயல் படுகின்றன. முத்தரப்பு ஒருங்கிணைப்பை மேம்படுத்த வேண்டும். ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும். அறிவியல் ஆராய்ச்சியில் உலகின் தலைசிறந்த நாடு இந்தியா என்பதை நாம் நிரூபிக்கவேண்டும்” என்று கேட்டு கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மைசெயலாளர் பி.கே.மிஸ்ரா, முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன், ஆலோசகர் அமர்ஜித் சின்ஹா, பயோ தொழில்நுட்ப துறை செயலாளர் ரேணு ஸ்வரூப், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பலராம் பார்கவா, சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கரோனா வைரஸுக்கு மருந்துகண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடு பட்டிருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர்  புகழாரம் சூட்டினார். அதேநேரம் மருந்து கட்டுப்பாடு நடைமுறைகள் காலத்துக்கு ஒவ்வாதவகையில் உள்ளன. கடினமான அந்த நடைமுறைகளை மாற்றவேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் புதியமருந்துகளை அவசரகால அடிப்படையில் சோதனைசெய்ய அந்தநாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன. ஆனால் இந்தியாவில் புதிய மருந்துகளை விலங்குகளுக்கு அளித்து சோதனை நடத்துவதற்குக்கூட பல மாதங்கள் ஆகின்றன.

கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ‘ரெமிடெசிவிர்’ மருந்து நல்லபலன் அளிப்பதாகக் கூறப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்தமருந்து மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் நமது சிவப்புநாடா நடைமுறைகளால் இந்த மருந்தை பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே காலத்துக்கு ஏற்றவகையில் இந்திய மருந்து கட்டுப்பாடு நடைமுறைகளில் மாற்றங்களை செய்ய பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...