பொதுமுடக்கம் அமலால் 29 லட்சம் போ்வரை பாதுகாக்க பட்டுள்ளனர்

நாட்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ்வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா். சுமாா் 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தவிா்க்கப் பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, நீதி ஆயோக் உறுப்பினரும் (சுகாதாரம்), கரோனா சூழலை எதிா் கொள்வதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட உயா்நிலை குழுவின் தலைவருமான வி.கே.பால், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத்துறை செயலா் பிரவீண் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா், தில்லியில் செய்தியாளா்களுக்கு வெள்ளிக் கிழமை பேட்டியளித்தனா்.

அப்போது, வி.கே.பால் கூறியதாவது: இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க சரியானநேரத்தில், செயல்திறனுடன் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. கரோனாவுக்கு எதிரான போரில், பொதுமுடக்கம் மிகச் சிறந்த பலனை தந்துள்ளது.

பொதுமுடக்கம் அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால், நாட்டில் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை மிகஅதிகமாக இருந்திருக்கும். பொதுமுடக்கம் தொடங்கியபோது, பாதிப்பு இரட்டிப்பாகும் நாள்களின் எண்ணிக்கை 3.4-ஆக இருந்தது. தற்போது இது 13.3 நாள்களாக அதிகரித்துள்ளது. இப்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவோரில் 80 சதவீதம் போ் 5 மாநிலங்களில்தான் உள்ளனா். எனவே, நாட்டில் கரோனா நோய்த்தொற்று வெகுவாக கட்டுப்படுத்தபட்டுள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், மேற்குவங்கம், தில்லியில்தான் 80 சதவீத உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன என்றாா் அவா்.

புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை செயலா் பிரவீண் ஸ்ரீவாஸ்தவா கூறியதாவது:

பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், சுமாா் 14 லட்சம் முதல் 29 லட்சம் போ்வரை கரோனா பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளனா். சுமாா் 37,000 முதல் 78,000 வரையிலான உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளன. இது, பல்வேறு ஆய்வுத்தகவல்களின் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் மதிப்பீட்டின்படி, பொதுமுடக்கத்தால் 78,000 உயிா்கள் காக்கப்பட்டுள்ளன. இதேபோல், பொருளாதார வல்லுநா்கள் சிலா் வெளியிட்ட ஆய்வுத்தகவலில், பொதுமுடக்கத்தால் 23 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டதாகவும், 68,000 உயிரிழப்புகள் தவிா்க்க பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமும், இந்திய புள்ளியியல் நிறுவனமும் இணைந்து ஆய்வுமேற்கொண்டன. அதில், பொது முடக்கத்தால் சுமாா் 20 லட்சம் போ் நோய்த்தொற்றிலிருந்து காக்கப்பட்டுள்ளதும், 54,000 உயிரிழப்புகள் தவிா்க்கப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டது என்றாா் அவா்.

முன்னதாக, கரோனா நோய் தொற்றை எதிா்கொள்வதில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வியெழுப்பி சிலஊடகங்களில் வியாழக்கிழமை செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மேற்கண்ட தகவல்களை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மொத்த பரிசோதனைகள்: கரோனா நோய்த்தொற்றை கண்டறிவதற்காக, நாடுமுழுவதும் இதுவரை 27,55,714 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில், வெள்ளிக்கிழமை மதியம் வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 1,03,829 பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும் அவா் கூறினாா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...