தற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்

மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி மூலம் தொழில்வர்த்தக கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த சங்கங்களைச் சேர்ந்த வர்களுடன் அமைச்சர் இது போல ஆய்வு நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். கோவிட் -19 முடக்க நிலை அமலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதன்தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது பற்றி மதிப்பீடுசெய்யவும், பொருளாதாரத்தை மீண்டும் நிலைப் படுத்துவதற்கு அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.

கூட்டத்தில்பேசிய கோயல், நாம் தேர்வு செய்வதைப் பொருத்து தான் எதிர்காலம் இருக்கும் . கோவிட் தாக்கம் முடிந்தபிறகு உருவாகும் சூழ்நிலையை சந்திக்க, நல்ல திட்ட யோசனைகள், உறுதியான அமலாக்க திட்டங்களுடன் தயாராக இருந்து, பணிகளைத்தொடங்கி இந்தியாவை உலகின் வல்லமையான நாடாக்க வேண்டும்

‘Jaan Bhi, jahan bhi’ என்ற பிரதமரின் சொல்லாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தின் மிகமோசமான காலகட்டம் முடிந்துவிட்டது. நிலைமைகள் சீரடையத் தொடங்கியுள்ளன. மீட்டுருவாக்கம் நடைபெற்றுவருகிறது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால், பொருளாதார சவாலை இந்ததேசம் சந்திக்க முடியும்.உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதாகவோ, வெளிநாட்டினருக்கு எதிரானதாகவோ தற்சார்பு இந்தியா திட்டம் இருக்காது . நாட்டின் அனைத்துதரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக, அனைத்து பகுதிகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதாக, தற்சார்புநிலையை உருவாக்குவதற்கான கோட்பாடாக இது இருக்கும் .

தாராளமயமாக்கலின் முப்பது ஆண்டு காலங்களில் நாடு முன்னேறியுள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், அங்கிருந்து பலகோடி பேர் வேலைகள் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது என்றார்.

தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்தியா முழுக்க 130 கோடி மக்களும் ஒரேமாதிரி உணர்வை பெறுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு அது உதவிசெய்யும். சாதாரண பயன்பாட்டில் உள்ள டேபிள், நாற்காலி போன்ற பொருள்கள், பொம்மைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்களைகூட நாம் இறக்குமதி செய்வது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

நாட்டில் தொழில்நுட்ப அறிவும், தொழில் திறன் படைத்தவர்களும் உள்ள நிலையிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது , இவையெல்லாம் மாற வேண்டும் என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...