தற்சார்பு இந்தியா 130 கோடி மக்களும் ஒரே உணர்வை பெறுவர்

மத்திய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று காணொலி மூலம் தொழில்வர்த்தக கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார்.

கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு இந்த சங்கங்களைச் சேர்ந்த வர்களுடன் அமைச்சர் இது போல ஆய்வு நடத்துவது இது ஐந்தாவது முறையாகும். கோவிட் -19 முடக்க நிலை அமலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, அதன்தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது பற்றி மதிப்பீடுசெய்யவும், பொருளாதாரத்தை மீண்டும் நிலைப் படுத்துவதற்கு அவர்களின் ஆலோசனைகளை கேட்கவும் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்தது.

கூட்டத்தில்பேசிய கோயல், நாம் தேர்வு செய்வதைப் பொருத்து தான் எதிர்காலம் இருக்கும் . கோவிட் தாக்கம் முடிந்தபிறகு உருவாகும் சூழ்நிலையை சந்திக்க, நல்ல திட்ட யோசனைகள், உறுதியான அமலாக்க திட்டங்களுடன் தயாராக இருந்து, பணிகளைத்தொடங்கி இந்தியாவை உலகின் வல்லமையான நாடாக்க வேண்டும்

‘Jaan Bhi, jahan bhi’ என்ற பிரதமரின் சொல்லாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தின் மிகமோசமான காலகட்டம் முடிந்துவிட்டது. நிலைமைகள் சீரடையத் தொடங்கியுள்ளன. மீட்டுருவாக்கம் நடைபெற்றுவருகிறது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால், பொருளாதார சவாலை இந்ததேசம் சந்திக்க முடியும்.உள்நாட்டினரை மட்டும் கருத்தில் கொண்டதாகவோ, வெளிநாட்டினருக்கு எதிரானதாகவோ தற்சார்பு இந்தியா திட்டம் இருக்காது . நாட்டின் அனைத்துதரப்பு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டதாக, அனைத்து பகுதிகளின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை உருவாக்குவதாக, தற்சார்புநிலையை உருவாக்குவதற்கான கோட்பாடாக இது இருக்கும் .

தாராளமயமாக்கலின் முப்பது ஆண்டு காலங்களில் நாடு முன்னேறியுள்ளது, ஆனால் நகர்ப்புறங்களில்தான் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஊரகப்பகுதிகள், பின்தங்கிய பகுதிகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், அங்கிருந்து பலகோடி பேர் வேலைகள் தேடி நகரங்களுக்குக் குடிபெயரும் நிலை ஏற்பட்டது என்றார்.

தற்சார்பு இந்தியா திட்டம் மூலம் இந்தியா முழுக்க 130 கோடி மக்களும் ஒரேமாதிரி உணர்வை பெறுவார்கள். இந்திய நிறுவனங்களுக்கு அது உதவிசெய்யும். சாதாரண பயன்பாட்டில் உள்ள டேபிள், நாற்காலி போன்ற பொருள்கள், பொம்மைகள், விளையாட்டு வீரர்களுக்கான ஷூக்களைகூட நாம் இறக்குமதி செய்வது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது.

நாட்டில் தொழில்நுட்ப அறிவும், தொழில் திறன் படைத்தவர்களும் உள்ள நிலையிலும் இதுபோன்ற நிலைமை உள்ளது , இவையெல்லாம் மாற வேண்டும் என்று கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...