சாலை விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை

சாலை விபத்துகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் மனிதா்கள்-விலங்குகள் இடையிலான மோதலைத் தவிா்ப்பது தொடா்பான தேசிய விழிப்புணா்வு பிரசாரம் தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை காணொலி முறையில் தொடங்கி வைத்து கட்கரி பேசியதாவது:

நாடு முழுவதும் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் 5,000 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அதனை மாற்றிஅமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் பலஇடங்களில் சாலைகளில் வனவிலங்குகள் கடப்பது வாடிக்கையாக உள்ளது. விலங்குகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தபாதை வழியாகவே நாம் இப்போது பயணிக்கிறோம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். எனவே, சாலையில் செல்லும் போது மனிதா்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கு பிரச்னை ஏற்படுத்தாமல் கவனமுடன்  வாகனத்தை இயக்கவேண்டும். யானை போன்ற பெரியவிலங்குகள் காட்டுப்பகுதி சாலைகளைக் கடக்கும்போது தேவையில்லாத தொந்தரவுகளை அளிக்கக்கூடாது. மனிதா்கள் இந்த உலகில் நிம்மதியாக வாழ உலகின் உள்ள பிற உயிரினங்களும் அவசியம். அப்போதுதான் இயற்கை சமநிலை இருக்கும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இதில் ஒன்றரை லட்சம்போ் உயிரிழக்கின்றனா். அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் இதனை 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்பதே நமது இலக்கு. இதற்காகவே இப்போது விழிப்புணா்வு பிரசாரமும் மேற்கொண்டுள்ளோம். சாலைவிபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து, அவற்றை விபத்துகள் நிகழாதவாறு மாற்றி அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும், அனைவரும் பாதுகாப்புணா்வுடன் பயணித்தாலும் யாருக்கும் பிரச்னை ஏற்படாது. தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்க தேவையான அனைத்து வசதிகளையும் மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...