இந்தியாவின் பெருமை மற்றும்  சுயமரியாதையில் சமரசம் இல்லை

இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரத்தை பொருத்த வரை இந்தியாவின் பெருமை பாதிக்க படாமல் இருப்பதை நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதிசெய்யும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். இந்தியா-சீனா இடையேயான இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றும் அது மேலும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது, ஆனால் இந்தியா,  சீனா, பாகிஸ்தான் என்ற எதிரிகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த மே 5-ஆம் தேதி லடாக் எல்லைப்பகுதியான பாங்கொங் த்சோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன படையினருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இருநாட்டு ராணுவ வீரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருதரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து இருநாட்டு உள்ளூர் ராணுவ அதிகாரிகளுக்குமிடையே  நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதற்றம் தணிந்தது, அதேபோல்  மே 9-ஆம் தேதி சிக்கிம் எல்லையான நகுலா பாஸ் பகுதியில் இருநாட்டு படைவீரர்களும் மோதிக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மே 22-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்கள் அத்து மீறி நுழைந்து விட்டதாககூறி  சீனா அங்கு ஏராளமான படைகளை குவிக்க தொடங்கியது, இந்தியாவும் பதிலுக்கு படைகளைக் குவித்து வந்த நிலையில் இரு நாட்டுக்கும் இடையே போர்பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் மே 27-ஆம் தேதியன்று இந்தியாவுக்கும் சீனாவுக்கும்  இடையேயான மோதல் விவகாரத்தில் மத்தியஸ்தம்செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது என ட்ரம்ப் கூறினார்.

ஆனால் இந்தியா-சீனா ஆகிய இருநாடுகளும் அமெரிக்க அதிபரின் அறிவிப்பை  புறக்கணித்ததைத் தொடர்ந்து இருநாடுகளும் எல்லை பிரச்சனையை பேசிதீர்க்க முன் வந்தன, இந்நிலையில்  கிட்டத்தட்ட 12 சுற்று பேச்சு வார்த்தைகள்  நடைபெற்றன, ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை, இந்நிலையில் 14 கார்ப்பஸ் கமாண்டர் அளவிலான இந்தோ-சீன பேச்சு வார்த்தை சனிக்கிழமை  சீன எல்லைப் பகுதியில் உள்ள  மோல்டோவில் நடைபெற்றது. 14 கார்ப்பஸ் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்  ஹரிந்தர்சிங், சீனாவின் தெற்கு சின்ஜியாங் இராணுவ மாவட்டத்தின் தலைவர் மேஜர்ஜெனரல் லியு லினுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது, இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாஜகவின் மகாராஷ்டிர ஜன சம்வத்  பேரணியில் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்,

அப்போது பேசியவர்,   இந்திய-சீன  எல்லை பிரச்சனையை பொருத்த வரையில், இந்தியாவின் பெருமையை நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி செய்யும்.  இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை பிரச்சினை நீண்டகாலமாக நடந்து வருகிறது, அதை விரைவில் தீர்க்க விரும்புகிறோம், சீனாவுடனான பேச்சு வார்த்தைகள் இராணுவ மற்றும் இராஜதந்திர மட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. ஜூன்-6 பேச்சு வார்த்தைகள் மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது. மொத்தத்தில்  நாட்டின் தலைமை வலுவான கைகளில் உள்ளது என்பதை மக்களுக்கு உறுதிபடுத்த விரும்புகிறேன். இந்தியாவின் பெருமை மற்றும்  சுயமரியாதை விவகாரத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசாங்கத்தின் விளக்கத்தை கோரியுள்ளனர், அவர்களுக்கு நான்ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,  நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற முறையில் நான் என்ன கூறினாலும் அதை பாராளுமன்றத்தில் கூறுவேன் என்றும், எப்போதும் மக்களை தவறாகவழிநடத்த மாட்டேன் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...