ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி கடன் வழங்க பட்டுள்ளது

பொதுத் துறை வங்கிகள் மூலம் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி கடன் வழங்க பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை  கட்டுப் படுத்துவதற்காக ஏறக்குறைய 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் முடங்கிப் போயின.  இவற்றுக்கு புத்துயிரூட்டும் வகையில் ரூ.3 லட்சம்கோடி அவசரகால கடன் உதவி திட்டத்தைமத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாத கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் (இசிஎல்ஜிஎஸ்) ஜூன் 1-ம் தேதிமுதல் இது வரையில் ரூ. 24,260 கோடி வழங்கப் பட்டுள்ளது.

பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்காகவும் சுய சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சலுகைதிட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதில் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் பொதுத்  துறை வங்கிகள் மூலம் ரூ.24,260 கோடி இசிஎல்ஜிஎஸ் திட்டம் மூலம் அனுமதிக்கப் பட்டு அதில் ரூ.12,200.65 கோடி வழங்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.2,637 கோடி கடன்வங்கிகள் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.1,727 கோடி வழங்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.2,547 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.1,225 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.13,363 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை ரூ.7,517 கோடி வழங்கியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா ரூ.1,893 கோடி கடனுக்கு ஒப்புதல்வழங்கி ரூ.526 கோடியை இது வரை அளித்துள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,842 கோடி அளித்து ரூ.794 கோடியை வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல்வங்கி ரூ.1,772 கோடி கடனுக்கு ஒதுக்கீடுசெய்து ரூ.656 கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை 9.25 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பிணையில்லாத வகையில் அவசரகால கடன் வழங்க இது அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.41,600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியானது அடுத்த 3 நிதி ஆண்டுகளுக்கானதாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...