ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி கடன் வழங்க பட்டுள்ளது

பொதுத் துறை வங்கிகள் மூலம் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் ரூ.12,200.65 கோடி கடன் வழங்க பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை  கட்டுப் படுத்துவதற்காக ஏறக்குறைய 2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் முடங்கிப் போயின.  இவற்றுக்கு புத்துயிரூட்டும் வகையில் ரூ.3 லட்சம்கோடி அவசரகால கடன் உதவி திட்டத்தைமத்திய அரசு அறிவித்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாத கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் (இசிஎல்ஜிஎஸ்) ஜூன் 1-ம் தேதிமுதல் இது வரையில் ரூ. 24,260 கோடி வழங்கப் பட்டுள்ளது.

பொருளாதாரத்தை முடுக்கி விடுவதற்காகவும் சுய சார்பு பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சலுகைதிட்டங்கள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.

இதில் ஜூன் 9-ம் தேதி வரையான காலத்தில் பொதுத்  துறை வங்கிகள் மூலம் ரூ.24,260 கோடி இசிஎல்ஜிஎஸ் திட்டம் மூலம் அனுமதிக்கப் பட்டு அதில் ரூ.12,200.65 கோடி வழங்கப்பட்டு விட்டதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நிறுவனங்களுக்கு ஒட்டு மொத்தமாக ரூ.2,637 கோடி கடன்வங்கிகள் மூலம் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதில் இதுவரை ரூ.1,727 கோடி வழங்கப் பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் ரூ.2,547 கோடி ஒதுக்கப்பட்டு ரூ.1,225 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ரூ.13,363 கோடிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுவரை ரூ.7,517 கோடி வழங்கியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா ரூ.1,893 கோடி கடனுக்கு ஒப்புதல்வழங்கி ரூ.526 கோடியை இது வரை அளித்துள்ளது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா ரூ.1,842 கோடி அளித்து ரூ.794 கோடியை வழங்கியுள்ளது.

பஞ்சாப் நேஷனல்வங்கி ரூ.1,772 கோடி கடனுக்கு ஒதுக்கீடுசெய்து ரூ.656 கோடியை வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை 9.25 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. பிணையில்லாத வகையில் அவசரகால கடன் வழங்க இது அளிக்கப் பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ரூ.41,600 கோடியை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியானது அடுத்த 3 நிதி ஆண்டுகளுக்கானதாகும்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதி� ...

துணிச்சலாக பணியாற்றிய பெண் அதிகாரிக்கு விருது 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, ஜம்மு - காஷ்மீரின் ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

மருத்துவ செய்திகள்

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...