ஏகாதசி விரதம் இருந்த அம்பரீசனை காத்த பெருமாளின் சுதர்சன சக்கரம்

சகல செல்வத்தை எல்லாம் பெற்று தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் மன்னன் பல_ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். இவன் ஏகாதசியில் விரதமிருந்து மறு நாள் துவாதசியில் நல்லநேரத்தில் பிரசாதம் உண்டு விரதத்தை முடிப்பார் .

இவரது நூறாவது விரதநாளில் சிறப்பான ஏற்பாடுகள்

செய்யப்பட்டிருந்தது. நாட்டுமக்கள் அனைவரும் மிகசந்தோஷமாக இருந்தனர். இருப்பினும் தேவலோகத்திலோ அனைவரும் வருத்தமாக இருந்தனர். அம்பரீசன் நூறாவது விரதத்தை முடித்துவிட்டால் தேவலோக பதவிகூட கிடைத்துவிடும்.

மானிடனுக்கு இந்த தேவலோக பதவி கிடைத்துவிட்டால் தேவர்களின் மரியாதை குறைந்துவிடும் என்று பயந்தனர். எனவே தேவர்கள் துர்வாச முனிவரின் உதவியை நாடினர் . துர்வாச முனிவரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்து விட்டு, மன்னனின் விரதத்தைதடுக்க பூமிக்குவந்தார். அவர் வருவதற்க்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தார் . அவர் ஏகாதசி விரதத்தை முடித்திருந்தாலும் துவாதசிநேரம் முடிவதற்குள் அவர் உணவை அருந்தியிருக்கவேண்டும். அப்போதுதான் ஏகாதசியின் முழுப்பயனையும் பெறலாம் .

துவாதசி நேரம் முடிந்துவிட்டால் பயனில்லை. துவாதசி ஆரம்பிக்க_மன்னன் உணவு உண்ண தயாரானார் . அதற்க்குள் துர்வாசர் வந்துவிட்டார். தன்விரதத்தை தடுக்கத்தான் துர்வாசர் வந்துள்ளார் என்பது மன்னனுக்குதெரியாது.
முனிவரை மகிழ்ச்சியுடன் வரவேற்ற மன்னன்,”” என்னுடன் தாங்களும் உணவருந்தினால், எனக்கு மிகுந்தசந்தோஷம் உண்டாகும் ‘என தெரிவித்தார் . முனிவரும் சம்மதித்தார்,

நதியில் நீராடி விட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டமோ வேறு , தான் தாமதமாக நீராடி விட்டு வந்தால் அதற்குள் துவாதசிநேரம் முடிந்துவிடும். மன்னன் நம்மை எதிர்பார்த்து காத்திருந்தால் அவனது விரதம் தடைபடும் என்பதுதான். துவாதசி முடிவதற்கு சில மணி_நேரங்களே இருந்தன . துர்வாச முனிவர் வருவதற்குள் சாப்பிட்டுவிட்டால் அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடும். இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தன .

வேதபண்டிதர்களிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடத்தினார் . உடனே தலைமை பண்டிதர, உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று_முறை குடித்தால் விரதம் முடிந்துவிடும் ஏகாதசியின் முழு பயனும் கிடைத்து விடும்,’ என தெரிவித்தார். அதை போன்று பெருமாளை நினைத்து தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன்விரதத்தை பூர்த்தி செய்துவிட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிட காத்திருந்தார் .

இதனை தனது ஞான திருஷ்டியினால் அறிந்த துர்வாச முனிவர் மிகுந்த கோபம் கொண்டார் . உடனே ஒரு பூதத்தை அம்பரீசனின் மீது ஏவி அவரை கொல்லுமாறு ஆணையிட்டார். இதை கண்டு பயந்த அம்பரீசன் பரிமளரங்கநாதரிடம் சென்று, பெருமாளே! உனக்காக ஏகாதசிவிரதம் இருக்ககூடாது என்பதற்க்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடமிருந்து என்னை காப்பாற்று என பெருமாளின் பாதத்தில் சரணடைந்தார்.

தனது பக்த்தனை கொள்ள வந்த பூதத்தை கண்ட பெருமாள் கோபம் அடைந்தார் தனது சுதர்சன சக்கரத்தால் அந்த பூதத்தை அழித்தார் .ஆனால் சுதர்சன சக்கரமோ ஏவிவிட்ட துர்வாசரையும் தாக்கவருகிறது. சிவன் பிரம்மா, ஆகியோரும் தங்களால் உதவ_இயலாது என்று கூறுகின்றனர். திருமாலிடமே துர்வாசர் தஞ்சம் அடைய அவரும் கை விரிக்கிறார்.பிறகு அம்பரீசனிடமே சென்று மன்னிப்புகேட்க அவரும் திருமாலை சுதர்சன சக்கரத்தை திரும்பபெற வேண்டி அவரை காப்பாற்றுகிறார். துர்வாசர் கர்வம் அடக்கியது .

நூறு ஏகாதசி விரதங்கள் இருந்து மன்னனிடம், வேண்டியதை கேள்’ என பெருமாள் கேட்டார் . அதற்கு மன்னன், தாங்கள் இத்தலத்திலேயே வீற்றிருந்து பக்தர்களின் குறை கேட்டு அருள் புரிய வேண்டும்,’என வேண்டினார் . பெருமாளும் மன்னன் விருப்பப்படி இத்தலத்தில் அருள் புரிந்து வருகிறார். இத்தளம் மயிலாடுதுறையில் இருக்கிறது இந்த திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருத்தலம். சென்னையி லிருந்து சுமார் 260 km தொலைவில்_அமைந்துள்ளது

ஏகாதசி விரதம் | ஏகாதசி விரதம் உருவான கதை | ஏகாதசி என சொன்னாலே பாவம் தீரும் | வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறக்கப்படுவது ஏன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுக்கு திமுக அளித்த வா ...

விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் எங்கே போனது ? அண்ணாமலை கேள்வி வாக்குறுதியை நம்பி ஏமாந்து போன விவசாயிகளின் வயிற்றில் அடித்திருக்கிறது ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்க ...

முருக பக்தர்கள் மீது எச்சரிக்கை விடுத்தால் நீங்கள் இருக்க மாட்டிர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை ''இரும்புக்கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ...

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கு முன் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ ? அண்ணாமலை சென்னை அடுத்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வெளியே, ஆட்டோவில் ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி  ...

திமுக அரசு முற்றிலுமாக தோல்வி – அண்ணாமலை நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தி.மு.க., ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக ...

திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் : அண்ணாமலை திட்டவட்டம் திருப்பரங்குன்றம் மலை கோவிலுக்கு சொந்தம் என தமிழக பா.ஜ., ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாம ...

தொடரும் பாலியல் சம்பவம் :அண்ணாமலை விமர்சனம் தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...